நாட்களில் செய்து முடிக்கும் வேளையை அவள் வெறும் எட்டு மணி நேரத்தில் செய்து முடித்து விடுவாள்.
வேலை நேரம் போக மற்ற நேரங்களில் தாத்தா சொல்லிக் கொடுத்த வித்தைகளையும் தியானங்களையும் செய்தவள் ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். அவளுக்கு ஒன்று மட்டும் தெரியும். ராகவ் அவளை தேடி வருவான் என்பது மட்டுமே.
படிப்பை முடித்த பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாயங்காலம் நாலு மணிக்கு ஒரு ஆலமரத்தடியில் காத்திருக்க சொல்லி ராகவ் சொல்லி இருந்தான். அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து அந்த ஆலமரம் சற்று தூரம் தான். ஆனால் பாதுகாப்பான இடம். அதனால் அந்தப் பூங்காவின் அருகில் உள்ள அந்த மரத்தடியில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் 4 மணியிலிருந்து ராகவ்விற்கு காத்திருக்கத் தொடங்கினாள் பூங்குழலி.
அவளுடைய காத்திருப்பு வீணாகுமா? அல்லது அவளை தேடி வருவானா... அவள் செய்து முடிக்க வேண்டிய பெரிய கடமை என்று தாத்தா சொல்லியிருந்தாரே... அந்த கடமையை அவள் கண்டு கொள்வாளா? விடையை அறிந்து கொள்ள அடுத்த எபிசோட்டை மறக்காமல் படியுங்கள்
தொடரும்