நினைவு மண்டலத்தை அழிக்க தொடங்கினோம் .
மெடிடேஷன் மூலமாதான் அந்த பொண்ணுக்கு அந்தத் திறமைகளை வளர்த்து இருந்தாங்க. கிட்டத்தட்ட ஐந்து வயதுதான் இருக்கும் அந்த பொண்ணுக்கு. ஆனா அதுக்குள்ள ஒரு ஐம்பது வயது அறிஞர்க்கு தேவையான அத்தனை அறிவையும் வளர்த்து இருந்தாங்க.
அது எல்லாத்தையும் அழிப்பதற்காக அதாவது அவளுடைய நினைவு மண்டலத்தை தாக்குவதற்காக நாங்க ஏற்கனவே ஃபார்முலாஸ் உருவாக்கி மருந்து கண்டுபிடித்தோம். அதன் மூலம் அந்த பொண்ணு உடம்புல இன்ஜெக்ட் பண்ணினோம்.
ஆனால் அந்த இன்ஜக்சன் ஃபுல்லா அந்த பொண்ணோட உடம்புக்குள்ள செல்லும் முன்னால அவளோட மாமா பையன் அந்த பொண்ணை கடலுக்குள்ள தள்ளி விட்டுட்டான். அவன் தான் கார்த்திக்.
நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்களே அந்த கார்த்திக்கா...
ஆமா ஆமா அவனே தான்... சரி போகட்டும், கடலுக்குள் சமாதி ஆகட்டும் என்று நினைக்கிற போது அங்கிருந்த மரத்தை உடைச்சி அவளுக்கு போட்டான் அந்த திமிர் பிடித்தவன்.
ஐந்து வயது ஆனாலும் அந்த குயிலி அதை பிடித்துக் கொண்டு தப்பிப் போக முயற்சி பண்ணினா.. அந்த நேரத்தில் கண் இமைப்பதற்குள் பெட்ரோல் குண்டை அவள் மீது வீச அது குறி தவறி நம் ஒரு படகு எறிந்து விட்டது. படகில் உள்ள ஒரு துண்டு குழலி கழுத்தில் பட்டது. இப்போதும் அந்த தீயினால் ஏற்பட்ட வடு அவளுக்கு நிச்சயம் இருக்கும்.
அவள் அங்கிருந்து வந்த ஒரு அலையால் இழுத்துச் செல்லப்பட்டாள். அதன் பிறகு கார்த்திக்கைப் பிடித்து அவன் நினைவுகளை அழித்து விட்டோம்.
அப்புறம் அந்த சைன்டிஸ் இருந்த அந்த கப்பலை திசை திருப்பி பெருமுடா எல்லைக்கு நேராக அனுப்பினோம். ஆனால் நாங்கள் எதிர்பாராதவிதமாக அங்கு ஒரு சம்பவம் நடந்தது. திடீரென்று சீறிக் கொண்டிருந்த அலைகள் வழிவிடுவது போல இருக்க கண் மூடி கண் திறப்பதற்குள் யாரோ அந்த கப்பலை உள்ளிழுத்துக் கொண்டது போலிருந்தது. மீண்டும் அலைகள் சாதாரணமாக இயங்கத் தொடங்கியது. ஆனால் எங்களுக்கு அது இன்னும் மர்மமாகவே இருந்தது. இப்படி தான் பெர்முடா எல்லைப் பகுதிகளுக்குள் செல்லும் அனைத்து கப்பல்களும் உள்ளே இழுத்துக் கொள்ள படுகிறது போல என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுது சைன்டிஸ் சொல்வதைப் பார்த்தால் அவர்கள் அங்கு உள்ளேயிருக்கிறார்கள் என்று சொல்லுகிறார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால் பிரசாத் சொல்கிறார். அங்கு ஒரு தீவு இருக்கிறது. அந்த குறிப்பிட்ட செகண்டில் அந்த கப்பல் உள்ளே இழுக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது என்று சொல்கிறார். அதனால் நிச்சயம்