மயக்கத்திலிருந்து மீண்டும் கண் விழித்தவள் பயத்துடனே சுற்றுமுற்றும் பார்க்க அவள் தன் படுக்கையில் தான் படுத்திருந்தாள்.
அவள் அறையில் அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. மீண்டும் பயத்தில் இதயம் திக் திக் என்று அடித்து கொள்ள சத்யா என்று ஒரே மூச்சாக கத்தினாள்.
இந்தா வந்துட்டேன் மல்லி என்ற அவனது குரலை கேட்ட பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
சத்யா எனக்கு பயமா இருக்கு... சீக்கிரமா வா சீக்கிரமா என்று அலறியபடியே எழுந்து அமர்ந்தவள் முன் வந்து நின்றான் மீண்டும் அந்த விறகுவெட்டி.
நீயா நீ இன்னும் போகலையா... சத்யா சத்யா என்று மீண்டும் அவள் கத்த மண்டு மண்டு ஏன் கத்துற நான்தான் சத்யா என்று அவன் சொன்னாலும் அவளோ பயத்தில் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தாள். வேர்வை ஆறாக ஓடிக் கொண்டிருந்தது.
அவள் உண்மையாகவே பயந்து விட்டாள் என்பதை உணர்ந்த சத்யா தன் முகத்தில் போட்டிருந்த அந்த வேஷத்தை கலைத்தான்.
பிறகு தான் சத்யா நீயா என்றாள் மல்லிகா.
ஆனாலும் சிறிது நேர அமைதிக்குப் பிறகு இது என்ன கெட்டப்... நீ என்ன பண்ண போற என்று பயம் கலந்தவளாகவே கேட்டாள் மல்லிகா.
மல்லிகாவின் பக்கத்தில் அமர்ந்த டாக்டர் சத்யா என்ன டாக்டர் மல்லிகா உங்களுக்கு இவ்வளவு பயமா... அப்போ என் கெட்டப் அப்படியே ஒரிஜினலாக இருக்குன்னு சொல்லுங்க. நீங்களே பயந்து விட்டீர்களே என்று சொல்லி சிரித்தான்.
அவள் பதில் பேசாமல் முறைத்தாள்.
மல்லிகா.. நரம்பியல் நிபுணர். ஆனால் பயத்துல நரம்பியல் டாக்டரோட நரம்புகளே ஒன்னோட ஒன்னு திருகி இருக்கும் போல தெரியுதே என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.
சத்யா இது என்ன விளையாட்டு நான் எவ்வளவு பயந்திட்டேன் தெரியுமா என்று அவள் சொல்ல அவள் தலையை மெதுவாக தடவி கொடுத்தான் சத்யா.
அண்ணாவை பார்க்க போறேன். அதனால இன்னைக்கு நாளைக்கு லீவ் சொல்லிட்டேன். நீ கிளினிக் போறியா என்ன என்று கேட்க அவளோ, ஆமா இன்னைக்கு நிறைய அப்பாயின்மென்ட் இருக்கு... இப்ப எல்லாம் நரம்புத் தளர்ச்சி அது இதுன்னு சொல்லி ஏகப்பட்ட கூட்டம்.
வர நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளை கண்டுபிடிக்கிறதுக்குள்ள நமக்கு போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. விதவிதமான வியாதிகள் என்னத்த சொல்றது போ என்று சலித்து