புலங்களையும் தாண்டி நாம் உள்ளே சென்று விட்டால் அங்கு அமைதியான ஒரு தீவு இருக்கிறது
கிட்டத்தட்ட நான் ஒரு 30 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியை யாருக்கும் தெரியாமல் மேற்கொண்டு வருகிறேன். ஒவ்வொரு பௌர்ணமியிலும் அமாவாசையிலும் ஒவ்வொரு கிரகங்களின் சுழற்சியின் போதும் அந்த பெர்மூடாவின் அலைகளில் ஏற்படும் மாற்றங்களையும் நான் ஆய்வு செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
பிரதாபன் நீங்க சொன்ன மாதிரி அன்னைக்கு நீங்க பெர்முடா முக்கோணத்தின் அந்த எல்லைக்குள்ளே அந்த சயின்டிஸ்ட்டை தள்ளிவிட்ட அந்த நொடி அங்கு அவர்கள் இறந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
என்ன சொல்கிறீர்கள் பிரதாப் சார் ...அந்த எல்லையில் சிக்கி யாரும் உயிரோடு இருந்ததாக சரித்திரம் இல்லையே...
ஆம்... உண்மை தான். அங்கிருந்து யாரும் வெளியே வராததால் நாம் அவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை அங்கு நாம் சென்று பார்த்து இருந்தால்.... அங்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தால்... என்ன செய்வது?
அப்படி அவர்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் ஏதாவது ஒரு விஷயத்தில் நமக்கு தெரிந்திருக்கும் அல்லவா...
ஆம் தெரிந்திருக்கும் தான்... அதனால் தான் இப்பொழுது தெரிகிறது. அங்கு இப்பொழுது சில காலமாக மக்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டு இருக்கிறது என்று.
என்ன சொல்றீங்க சார். கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லுங்க...
நீங்க அந்த பெர்முடா முக்கோணத்தில் அந்த சயின்டிஸ்ட் ஃபேமிலிய அழிக்க நினைத்து அவர்களை வழிவிலக செய்த அந்த நேரத்தை நான் செக் பண்ணும் பொழுது அந்த நேரத்துல நிலவும் சூரியனும் பூமியும் கிரகங்களும் ஒரு 45 டிகிரி ஆங்கிள்ல நேர்கோட்டுப் பாதையில் சந்தித்து இருக்கிறது. அந்த நொடி கிட்டத்தட்ட ஒரு 20 செகண்ட் அந்த நொடியில்தான் நீங்க அவர்களை தள்ளி விட்டு இருக்கிறீர்கள். அதனால் தான் திடீரென்று அவர்கள் மறைந்து இருக்கிறார்கள்.
அப்படி நடக்க முடியுமா...
ஆமா மிஸ்டர் பிரதாபன். இந்த உலகில் சாத்தியமில்லை என்று எதுவும் இல்லை. முயற்சிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ம்ம்... ஆனால் எப்படி
அந்த 20 செகண்ட்டில் அவர்கள் ஷிப் அந்த பெர்முடா எல்லை பகுதியை தொட்டு இருக்கிறது. சாதாரண நேரமாக இருந்தால் அந்த நேரத்தில் அந்த கப்பல் மறைந்து இருக்கும். ஆனால்