என்னப்பா என்ன பார்த்த இன்னும் அதிர்ச்சி விலகவில்லை போல.
ஆமா சார்...
சில நேரங்கள்ல நாம உயிரோட இருக்கிறதை விட நாம இல்லாமல் இருந்து நம்ம காரியத்தை முடித்துக் காட்டுவது தான் பெருமை. அதனாலதான் நான் செத்துப் போன மாதிரி எல்லாம் செட் பண்ணிட்டு நான் இங்கே வாழ்ந்துகிட்டு இருக்கேன். என்னோட நோக்கம் என்னோட குறிக்கோளை அடைய போறேன்.
ஓ... சூப்பர் சார்
உட்காருங்க...
இங்க பாருங்க மிஸ்டர் பிரதாபன் ( டாக்டர் சத்யா அண்ணா அண்ணா என்று அழைத்தது இந்த பிரதாபன் தானா..)....
சொல்லுங்க பிரசாத் சார்.
கடலில் அலைகள் ஏற்பட என்ன காரணம் தெரியுமா? நிலாவும் சூரியனும்தான். இவை இரண்டும் மாறிமாறி செலுத்தும் ஈர்ப்பு விசைதான் அலைகளுக்குக் காரணம். இதனால் கடலில் உயர்வான அலையும் தாழ்வான அலையும் எப்போதும் மாறிமாறி ஏற்படுகின்றன. பூமியின் சுழற்சியாலும் காற்றின் வேகத்தாலும் தொடர்ந்து அலைகள் அதிகரிக்கின்றன.
பொதுவாகவே அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலில் அலைகள் அதிகமாகவும், உயர்ந்தும் வீசும். இதற்குக் காரணம் அந்த இரு தினங்களும் உருவாகக் காரணமான நிலவுதான். தன்னை முழுமையாக மறைத்துக் கொண்ட அமாவாசை நாளில், முழுமையாகக் காட்டிக் கொண்ட பவுர்ணமி நாளில் என்றில்லாமல், பொதுவாகவே கடலில் அலைகள் உருவாக நிலவின் ஈர்ப்பு ஆற்றலே காரணம்.
சாதாரணமாக கடலில் ஏற்படும் அலைகளை விட பெர்முடா பகுதியில் எப்பொழுதும் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பது நாம் அறிந்ததுதான். அதாவது சுனாமியை போன்று அலைகள் எப்போதும் சீறிக் கொண்டிருக்கும்.
பெர்முடா டிரையங்களின் எல்லை முழுவதும் அலைகள் எப்பொழுதும் கொந்தளித்துக் கொண்டு இருந்தாலும் அதில் நடுப்பகுதி மிக அமைதியாக இருக்கிறது. அதாவது அது ஒரு தீவு பகுதியாக இருக்க வேண்டும்.
இது சாத்தியமா பிரசாத் சார்...
எஸ் சாத்தியம் தான்.. இதுவரை அங்கு காணப்படும் சில காந்தப் புலமும் ஈர்ப்பு சக்திகளுமே கப்பல்களையும் விமானங்களையும் மூழ்கடித்து விடுகிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அது உண்மைதான். ஆனால் இந்த அலைகளையும் ஈர்ப்பு விசைகளையும் காந்தப்