கொண்டது. ஆறு மாதங்களுக்கு முன் இறந்தவளுக்காக இப்போது கண்ணீர் விடலானான்.
அப்போது கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. கண்ணை துடைத்துக் கொண்டான்.
"யெஸ் கம் இன்"
ரேச்சல் உள்ளே வந்தாள். அவனை நேர் பார்வையாக பார்த்தாள்.
"உன்க்கு என்ன ஆச்சு ஜெமி… எங்கிட்ட முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறாய்…"
"அதெல்லாம் ஒன்றுமில்லை. ட்ராவல் செஞ்ச களைப்பு… அவ்வளவுதான்…"
"இல்லை… உனக்கு என்மேல கோபம் இருக்கு. நான் அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல நடந்த விதம் ரொம்ப தப்பு. அதுதான் உனக்கு என்மீது கோபம்"
"இல்லை… அதெல்லாம் யூஎஸ்ல சகஜம். எனக்கு கோபம் கிடையாது… ஆனால்.."
மீரா உன்னுடைய கணவன் எப்படிபட்டவன் என்று தெரியாது… நீ இத்தனை நாள் இங்கிருப்பதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று தெரியாது. நீ ரேச்சல் இல்லை… அதனால் விலகி நிற்கிறேன் என்று சொல்ல முடியுமா என்ன?
"ஆனால் என்ன ஜெமி…"
"நீ இனி அதுபோல நடந்துக்காமல் இருப்பது நல்லது. "
"கண்டிப்பாக… நான் அம்மாட்ட ப்ராமிஸ் பண்ணிட்டேன். உனக்கு லஞ்ச் தயாராயிடுச்சு. சாப்பிட வா" என்றவள் கை விரலில் இருந்த லக்கி மோதிரத்தை சுட்டி காட்டி ,
"இது எனக்கு லக்கியா இருக்கா ஜெமி?" என்று சந்தேகமாக கேட்டாள்.
"நிச்சயமாக… நீ உன்னுடைய வாழ்க்கையில் தொலைத்த அத்தனையும் உனக்கு திரும்ப கிடைக்கப் போகிறது. நீ சந்தோஷமாக வாழப் போகிறாய்"
"நன்றி சுவாமி ஜெமியானந்தா… நீங்கள் சொன்னது நடக்கட்டும். என்னை ஆசிர்வதியுங்கள்" எனறு கேலியாக தலை குனிந்து சிரித்தாள்.
"உனக்கென்ன நிறைய குட் குவாலிட்டீஸ் உன்னிடம் இருக்கு… உன்னை எல்லோருக்கும் பிடித்து விடும்."
"அப்புறம்…"
"நீ நல்லா இருப்பேம்மா" உண்மையாக சொன்னான். மீரா அத்தனை வாழ்த்திற்கும் தகுதியானவள்தான்… நல்ல பெண்.
'ஷீலா அத்தை முகத்தில் அத்தனை நிம்மதியையும் மகிழ்ச்சியையும் பார்க்க முடிகிறது...தேங்க்யூ மீரா! உனக்கு ஒரு சகோதரன் இருந்தால் என்ன செய்வானோ அதை நான் செய்வேன். உன் கணவனை கண்டு பிடித்து உன்னை அவனுடனும் உன் குழந்தையுடனும் சேர்த்து வைப்பேன்' அவன் மனதிற்குள் பேசிக் கொண்டான்.
"ஏதோ வித்தியாசமா இருக்கு. சரி சாப்பிட வா" என்று சொல்லி வெளியேறினாள்.
தொடரும்
Next episode will be published on 13th Oct. This series is updated weekly on Tuesday evenings.