தங்கதுரையை பொறுத்தவரை ஒன்றுக்கும் பயனில்லாமல் மீரா செத்துவிட்டாள் என்ற கோபம்தான் இருந்தது. இறந்தது மீராதான் என்பதையே அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மேத்யூஸ் சொன்னதை வைத்து ஏற்றுக் கொண்டார்.
அந்த பேருந்தில் பயணித்தவர்களில் இரண்டு பேர்தான் இளம் பெண்கள்.. அதில் ஒருத்தி ரேச்சல் எனில் மற்றது மீராதான் என்று உறுதிபடுத்திக் கொண்டார். அவளை அடையாளம் காட்ட சொன்னபோதுகூட சரியாக பார்க்கவில்லை. தலையை ஆட்டி விட்டார். விபத்தில் இறந்துபோன உடலை பார்த்தால் நான்கு நாட்களுக்கு சோறுதண்ணி இறங்காது என்ற பயம் வேறு இருந்தது.
அத்துடன் விஷயம் முடிந்ததென அவர் தன்னிடம் இருந்த ஆவணங்களை காட்டி அவர்தான் மீராவின் தந்தை என்று உறுதிபடுத்தினார். அந்த சமயத்தில் மேத்யூஸ் முகமாற்று சிகிச்சைபற்றி பேசவும் எரிந்து விழுந்தார். பிறகு மேத்யூஸ் தர ஒப்புக் கொண்ட பெரும் தொகைக்கு தலையாட்டினார். உடனேயே ரேச்சலின் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.
ஷீலாவை தொடர்பு கொண்ட மேத்யூஸ் தங்கதுரைக்கு தர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வர வைத்தார். பணபரிவர்த்தனை முடியவும்… மீராவின் முகத்திலிருந்து முக்கோண வடிவ பகுதி ரேச்சலுக்காக சேகரிக்கப்பட்டது. இந்த ஆப்ரேஷனை மதுசூதனன் செய்தார்.
ரேச்சலுக்கான அறுவை சிகிச்சையை மும்பை டாக்டர் ரேம்சென் செய்தார். ரேச்சலின் முக அமைப்பு சரியாக வர அவளுடைய புகைப்படத்தின் உதவியுடன் ஃபேஸ் ட்ரான்ஸ்ப்ளான்ட் நடந்தது. ஆப்ரேஷன் வெற்றியடைந்தது.
மீராவின் உடலை வாங்கிக் கொண்டு தங்கதுரை கிளம்பி விட்டார்.
[சத்யனிடம் இந்த விஷயத்தை மறைத்து விபத்தினால் மீராவின் முகம் உடல் பாதிக்கப்பட்டதாக தங்கதுரை கூறிவிட்டார். அவளுடைய கையில் இருந்த ரூபி வளையலை ஆதாரமாக கொண்டு அது மீராதான் என உறுதி செய்துவிட்டதாக கூறினார். இதையே போலீஸின் ரிக்கார்டிலும் பதிவு செய்தார். பஸ்ஸில் கிடைத்த மீராவின் ஹோண்ட் பேக்கில் இருந்த ரோஸ் குவார்ட்ஸ் நெக்லஸும் ஒரு ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்படியாக சத்யன் ஒப்புக் கொள்ளாத நிலையிலும் மீரா மரணித்து விட்டதாக பதிவு செய்யப்பட்டது]
இங்கே மருத்துமனையில் ரேச்சலுக்கான அறுவை சிகிச்சை பதினாறு மணிநேரம் நடைபெற்றது. வெற்றிகரமாக முடித்து ரேச்சல் பாதுகாப்பான நிலைக்கு வந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மூன்றாம் நாள்… அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஷீலா வெளியே