பார்த்தார்.
அவருடைய கண் எதிரே பிங்க் நிற குர்தா சிவப்பாக மாறிட ரத்த வெள்ளத்தில் ரேச்சல் கிடந்தாள். தொலைவில் இருந்து நிறைய பேர் ஓடி வருவது தெரிந்தது. அவரால் எழ முடியவில்லை. மெல்ல அவள் அருகில் தவழ்ந்து சென்று அவளை அழைத்தார். அவளிடம் அசைவில்லை. அவளை மடியில் கிடத்தியபடி,
'ஜீஸஸ், என் செல்லத்திற்கு எதுவும் ஆகி விடக் கூடாது. அவளை காப்பாற்றுங்கள்… விரைவாக உதவி செய்யுங்கள் ஆண்டவரே…' வேண்டினார்.
அவருக்கும் அடிபட்டிருந்ததால் மயக்கம் வர ஆரம்பித்தது. கடைசி மூச்சு இதுதானோவென அரை மயக்கத்தில் கிடந்தார்.
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒலியெழுப்பி வந்ததையும் யாரோ ஒருவர் அருகில் வந்து ரேச்சலை தூக்கினார்.
"இவங்க உங்களுடன் வந்தவங்களா?" என்று கேட்டு அவருடைய மகள்தான் என்பதை உறுதி செய்தவர்கள் அவரையும் வாகனத்தில் ஏற்றினார்கள். அத்துடன் அவர் மயங்கி போனார்.
மீண்டும் கண் விழித்த போது படுக்கையில் படுத்திருந்தார்… அது மருத்துவமனை! அவருடைய செவியில் அழு குரல்களும் வலியால் கதறும் குரல்களும் கேட்டன. ரேச்சல்….
துள்ளி எழுந்தார்.. அங்கிருந்த நர்ஸ்,
"சார்… உங்களுக்கு பெரிய அடி எதுவும் படவில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்தால் போதும். யாருக்காவது விவரம் சொல்ல வேண்டும் என்றால் செல் நம்பர் கொடுங்க. நாங்க தெரிவிக்கிறோம்."
"ரேச்சல்… ரேச்சல்… என் பொண்ணு எங்கே?"
"யாரு… உங்களுடன் வந்தவர்களா?"
"ஆமாம் சிஸ்டர்.. என் மகள்… அவள் எங்கே?"
"சாரி சார். அவங்களுக்கு பலத்த அடிபட்டிருக்கு. ஐஸியூவில் இருக்காங்க…"
"அவளுக்கு எதுவும் ஆபத்தா?"
"நீங்க சீஃப் டாக்டரிடம் கேளுங்கள். அவருடைய அறை இதே காரிடரில் நான்காவதுதான்." என்று சொல்லி விட்டு அடுத்த நோயாளியை பார்க்க நகர்ந்தார்.
தடுமாறியபடி சீஃப் டாக்டரின் அறைக்கு சென்றார்.
"வணக்கம் டாக்டர்…" என்றவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு… ரேச்சலை பற்றி விசாரித்தார்.
"அவங்க உங்க டாட்டரா… அவங்களுக்கு பலத்த அடிபட்டிருக்கு. உயிருக்கு போராடியவரை ஸ்டேபில் பண்ணிட்டோம்…"