"எனக்கும் அப்படித்தான்… பத்து மாசம் வயித்துக்குள்ள இருந்தப்பவே… அவளை அப்படி கவனிச்சிகிட்டேன். அவளுக்காக சாப்பிட்டேன்… அவளுக்காக உறங்கினேன்… அவளுக்காக மூச்சு விட்டேன்… அவளுக்கு இப்போது மூணு மாசம்தான் ஆகிறது. அவளை எங்கிட்டே இருந்து பிரிச்சிட்டாங்க… இல்லை.. இல்லை… நான்தான் பிரிஞ்சிட்டேன்"
"ஏம்மா…." அவருக்கு தம்பி மகளின் நிலமை புரிய ஆரம்பித்தது.
"எனக்கு மோசமான வியாதி வந்துடுச்சுனு என்னை நம்ப வச்சாங்க… சீக்கரம் செத்து போயிடுவேன்னு ரிப்போர்ட்டை காட்டினாங்க…."
"கடவுளே…. "
"அதை நம்பி நான் என்னோட ஹஸ்பண்ட்கிட்ட அந்த குழந்தைய கொடுத்திட்டேன். அவளை பார்த்து ரொம்ப நாளாச்சு"
"இதையெல்லாம் உன்னோட புகுந்த வீட்டினர் செஞ்சாங்களா…" கோபம் உள்ளுக்குள் குமிழிட கேட்டார்.
"ம்ஹும்… இல்லை… அவங்க ரொம்ப நல்லவங்க. எங்க வீட்டுலதான் செஞ்சாங்க… என்னோட சொத்துக்காக அப்படி செஞ்சாங்கனு எனக்கு இப்பதான் தெரிஞ்சது.. அது என் அப்பா வழி சொத்தாம்… அதன் உரிமை எனக்குதான் இருக்கிறது. எனக்கு பிறகு என் மகளுக்கு போய் விடும்… அதனால் என்னிடமிருந்து எழுதி வாங்க இப்படி செஞ்சிருக்காங்க."
ஜீஸஸ்… தம்பி தன் குடும்பத்தோட நல்லா இருக்கட்டும் என்று தந்த சொத்து இந்த பெண்ணிற்கு ஆபத்தாகி விட்டதா?.
"நீ உன் ஹஸ்பெண்ட் கிட்ட சொல்லலாமே…" ரேச்சல் குறுக்கிட்டாள்.
"நான் பைத்தியம்னு அவங்க நம்பிட்டு இருக்காங்க…"
"?"
"அப்படி நடிச்சேன்… யாராச்சும் பைத்தியம் சொல்றதை நம்புவாங்களா?"
"உன்னோட சொத்து பிரச்சினையை சொல்லாமே"
"ப்ச்… அதெல்லாம் எங்கே இருக்குனு எனக்கு தெரியாது. ஒண்ணும் இல்லாத என்னை என்னை தத்து எடுத்து வளர்த்ததா சொன்னாங்க… என்.பேர்ல சொத்து இருக்குங்கற விஷயமே இன்னிக்குதான் தெரிய வந்தது."
"நான் தேடித்தரவா… எனக்கு ரிஜிஸ்டர் ஆபீஸில் ஆளுங்களை தெரியும்" அவர் யோசனை சொன்னார். தம்பிக்கு அவர் தந்த பெரும்பாலான சொத்துகள் கொடைகானலில்தான் உள்ளன. அங்கு விசாரித்தால் தெரிந்து விடும்.
"என்னோட அப்பா பேரில்தான் அத்தனையும் இருக்கு. அவர் கிறிஸ்டியனாம்...எனக்கு அவரோட