உண்மையான பெயர் தெரியாது… அதோட அந்த சொத்தை வைத்து நான் என்ன செய்ய போறேன். எனக்கு என்னோட வாழ்க்கை கிடைத்தால் போதும்… அதுக்கும் சேர்த்து திட்டம் போட்டிருக்காங்க… என்னை விலக்கி விட்டு அவங்க பொண்ணை சத்யனுக்கு கல்யாணம் செய்து வைக்க பார்க்கறாங்க…'
"அதுக்கு உன்னை எதுக்கு கொல்ல முயற்சிக்கணும்?"
"அவருக்கு என் மேல பிரியம் அதிகம். எனக்கு புத்தி சுவாதினம் இல்லேனு தெரிஞ்ச பிறகும் விவாகரத்து செய்ய மறுத்திட்டார்…இந்த சொத்து விஷயத்தை நான் தெரிந்து கொண்டதாலும் புத்தி சுவாதினம் இல்லாததுபோல நான் நடிப்பது தெரிஞ்சதாலும் என்னை கொல்ல நினைக்கறாங்க. பிறகு என் தங்கையை அவருக்கு கல்யாணம் செய்து வச்சிடலாம்."
"அப்புறம் அது அந்த குழந்தைக்கும் ஆபத்தாகி விடுமே… அவரிடம் நான் பேசி பார்க்கவா…"
"நானே பேசிப்பேன்… அதுக்காகதான் வீட்டை விட்டு ஓடி வந்தேன். பின்னாடியே துரத்திட்டு வர்றாங்க…"
"நீ பயப்படாதே… உன் கணவரின் தொலைபேசி எண் தெரிந்தால் பேசு" என்றபடி அவருடைய அலைபேசியை தந்தார்.
"அவர் போனை எடுக்க மாட்டேங்கறார்."
"கொஞ்சம் பொறுமையா முயற்சி செய்மா. பயப்படாதே உனக்கு நாங்கள் இருக்கிறோம்." என்று சொன்னவருக்கு சட்டென நினைவு வந்தது. ஃபெலிக்ஸ் அனுப்பிய புகைப்படம் அவருடைய அலைபேசியில் இருக்கிறதே… அதை வைத்து மீராவிற்கு அவர் யார் என்று புரிய வைக்கலாமே.!
"உன்னுடைய பேரன்ட்ஸை பார்த்த நினைவு இருக்கிறதா… புகைப்படங்கள் எதிலாவது பார்த்திருக்கிறாயா?."
"இல்லை அங்கிள்…"
மீரா சொல்லும்போதே அவர் அலைபேசியை எடுத்து ஃபெலிக்ஸ் அனுப்பிய போட்டோவை தேடி எடுத்து விட்டார்.
"இது யார்னு தெரியுதா?"
"தெரியலை… ஆனால் இந்த குட்டி பெண் நான்தான்… என்னுடைய சிறிய வயது போட்டோவை பார்த்திருக்கிறேன். இதுதான் என்னுடைய பேரன்ட்ஸா…"அவள் திகைப்புடன் வினவினாள்.
"ஆமாம்"
"இது உங்களிடம் எப்படி…"
"இது ஃபெலிக்ஸ்… என்னுடைய தம்பி. அவன் இந்து பெண்ணை மணந்ததால் சொத்தை பிரித்து தந்து வீட்டை விட்டு விலக்கி வைத்து விட்டார்கள். நாங்கள் அதன் பிறகு சந்திக்கவே