சொல்வீர்கள்...
கேள்வி கேட்பதா.... அவன் பேசும் நிலையில் இருந்தால் தானே கேள்வி கேட்பான். அவனை அரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று பிறகுதான் அழைத்துச் செல்லப் போகிறோம்.
அப்படி என்றால் அவன் சாப்பிடும் ஏதாவது பொருளில் மயக்க மருந்தை கலந்து கொடுக்கப் போகிறீர்களா....
ஆம் சத்யா... அப்படித்தான்
சரி அண்ணா... கவனமாக செயல்படுங்கள்.
சரி சத்யா... நீ அருகில் இருந்து அவனைப் பார்த்துக் கொள். அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் நீயே அவனது பாக்கில் எடுத்து வை. ஏனென்றால் நமக்கு தெரியாமல் அவன் வேறு எந்த பொருளையும் கொண்டு வரக்கூடாது. கவனமாக இரு...
சரி அண்ணா என்று அவன் ராகவ் நோக்கி சென்றான்.
அதே நேரத்தில் மயங்கிய நிலையில் இருந்த குயிலியை கொண்டு வந்து ஒரு அறைக்குள் அடைத்து விட்டு வெளியே சென்றார்கள்.
அதிகாலை நேரம்...
ராகவ் பிரதாபன் பிரசாத் மூவரும் ஏறிக்கொள்ள அந்த கப்பல் அங்கிருந்து தன் பயணத்தை தொடங்கியது.
ராகவ் மனதில் ஒரு இனம்புரியாத பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. ஏனோ மீண்டும் ஒருமுறை குயிலியை பார்க்க முடியாதோ என்ற அச்சம் அவனுக்குள் பரவ ஆரம்பித்தது. ஒரே ஒரு முறையாவது மீண்டும் அவளை பார்த்துவிட்டு வந்து இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்ற அவனுக்குள் எழுந்த கோபத்தை அவனாலேயே அடக்க முடியாமல் போனது. கோபத்தில் அவன் கையிலிருந்த தண்ணீர் கிளாஸை அழுத்தி பிடிக்க அவன் பிடியின் அழுத்தம் தாங்காமல் அந்த கண்ணாடி டம்ளர் உடைந்து அவன் கையைப் பதம் பார்த்ததோடு சுக்குநூறாக உடைந்த துண்டுகளாக தரையில் விழுந்தது.
அதை பார்த்த பிரதாபன் வேகமாக அவன் அருகில் ஓடிவந்து என்ன ஆச்சு என்றான் பதட்டப்படுவது போல நடித்துக்கொண்டு...
அது ஒன்றும் இல்லை சற்று கவனக்குறைவாக இருந்து விட்டேன். இனி கவனமாக நடந்து கொள்கிறேன் என்று அவன் கூற இவன் இரு பொருள்பட பேசுகிறானோ என்று ராகவ்வை சந்தேகமாக பார்த்தான்.
என்னாச்சு அப்பா... ரொம்ப கவலைப்படுறிங்க... ஒன்னுமில்லை எதார்த்தமாக நடந்த விஷயம்தான் என்றவன் அவருடன் சேர்ந்து அறைக்குள் சென்று விட்டான்.
பிரதாபன் மனதிற்குள் ஏதோ ஒன்று அழுத்திக்கொண்டே இருந்தது. ஏதோ ஒன்று