தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 06 - முகில் தினகரன்
அடுத்த நாள் காலை அலுவலகம் வந்த அர்ச்சனாவிற்கு அலுவலக வேலகளில் கவனம் செலுத்தவே முடியவில்லை. நேற்றைய நிகழ்வுகஏ மனதிற்குள் திரும்பத் திரும்ப ஓடி அவளை பொலிவிழக்கச் செய்தன. “ச்சே!...என்ன ஒரு வக்கிரமான புத்தி அந்த மாப்பிள்ளைப் பையனுக்கு!...அவன் சொன்னதைக் கேட்டா மூத்தவ மனசு என்ன பாடுபடும்ன்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டானா?...இவனெல்லாம் படிச்சவனா?...பேங்க் உத்தியோகம் வேற இந்தக் காட்டு மிராண்டிக்கு!...கர்மம்..கர்மம்!”
பக்கத்து இருக்கை கவிதா சன்னக் குரலில் கேட்டாள், “என்ன அர்ச்சனா காலையிலிருந்தே ஒரு மாதிரி நெர்வஸா இருக்கே?...என்னாச்சு?...நேத்திக்கு உங்க அக்காவைப் பெண் பார்த்திட்டுப் போன மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நெகடிவ் ரிப்ளை குடுத்திட்டாங்களா?”
“ஹூம்....அப்படி குடுத்திருந்தாக் கூட சந்தோஷப்பட்டிருப்போம்!...அதி விட மோசமான ரிப்ளையைக் குடுத்திட்டாங்க!”
“என்ன சொல்றே அர்ச்சனா?...கொஞ்சம் புரியும்படி சொல்லேன்!” சவிதா தான் பார்த்துக் கொண்டிருந்த ரிஜிஸ்டரைத் தள்ளி வைத்து விட்டு சீரியஸானாள்.
மாப்பிள்ளைப் பையனின் புது ஆசையையும், அதை தரகர் வந்து சொன்னதும் தன் வீட்டில் பெற்றோரிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களையும் அப்படியே அர்ச்சனா ஒப்பிக்க, கடும் கோபத்திற்குள்ளானாள் சவிதா. “இதுதான்....இதுதான் அர்ச்சனா ஆம்பளைத் திமுருங்கறது!...”என்றாள் தன் பற்களை “நற..நற”வென்று கடித்துக் கொண்டு.
“அது வேற ஒண்ணுமில்லை சவிதா...இவனுகளைக் கேட்க ஆளில்லாமப் போச்சு...அதான் கொழுப்பேறிப் போய் ஆடறானுக!” தன் வெறுப்பை உமிழ்ந்தாள் அர்ச்சனா.
அப்போது சட்டென்று ஞானோதயம் வந்தவள் போல் அந்தச் சவிதா சொன்னாள், “கேட்க ஆளில்லாம ஏன் போகணும்?...நீ கேட்கலாமே?”
“நானா?...நான் எப்படி?” அர்ச்சனா இழுக்க,
“ஆமாம்...நீயேதான்!...உனக்குத்தான் அதுக்கு முழு உரிமையிருக்கு!...ஏன்னா அவன் குறி வெச்சிருக்கறது உன்னைய...அதனால நீ கேட்கலாம்!...உங்க அக்கா போய்க் கேட்க முடியாது!...கேட்கவும் கூடாது!...உன்னோட அப்பாவும்..அம்மாவும் நிச்சயம் போய்க் கேட்க மாட்டாங்க!...ஸோ...ஒரே சாய்ஸ்!...நீதான் அர்ச்சனா!...”
சில நிமிடங்கள் யோசித்த அர்ச்சனா, “கரெக்ட் சவிதா...நேத்திக்கு இருந்து மனசே சரியில்லாம...ராத்திரி முழுசும் தூக்கம் பிடிக்காம...பித்துப் பிடிச்சவ மாதிரி இருந்தேன்!...அதே மாதிரி இன்னிக்கு காலைல ஆபீஸ் வந்தும் ஆபீஸ் வேலைகள்ல கவனம் செலுத்த முடியாம திண்டாடிக்கிட்டிருக்கேன்!...இதுக்கெல்லாம் யார் காரணம்?...அந்த நாய்தானே?...அதனால இந்த