திறந்தான், அவளும் அவன் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெட்டிற்கு பக்கத்தில் இருந்த டேபிளில் ஜனனியும் விஜயும் ஒன்றாக இருக்குமாறு போட்டோ இருக்கவே ஹனிகா தவழ்ந்தபடியே சென்று அந்த போட்டோவை எடுத்து வைத்துக் கொண்டாள்
”ம்மா ம்மா” என இருவரையும் ஒன்றுபோல பார்த்து அழைக்க அவளின் அழைப்பைக் கேட்ட விஜய் என்னவென பாப்பாவை பார்க்க அவள் செய்வதைக் கண்டுச் சிரித்தான், அந்த போட்டோவில் விஜய் தாடியில்லாமல் இருந்தான். அவளிடம் வந்தான் விஜய், அவளோ அவனையும் அந்த போட்டோவையும் மாறி மாறி பார்க்க அவனோ
”என்னடா அப்படி பார்க்கற அது நான்தாடா, தாடியில்லாம இருக்கேன் அவ்ளோதான், இப்பதான் நான் தாடியை வளர்க்கிறேன் முன்னெல்லாம் நீட்டா ஷேவ் பண்ணிக்கிட்டு இருப்பேன் தெரியுமா” என கேட்க அவளோ வியப்பாக பார்க்க அவன் உடனே
”ஓ உனக்கு தெரியாதுல்ல இரு இரு வரேன்” என சொல்லிவிட்டு மீண்டும் அலமாரிக்குச் சென்று எதையோ தேடிப்பிடித்து ஒரு ஆல்பம் கொண்டு வந்தான்.
அது அவனது கல்லூரி நாட்களில் எடுத்துக் கொண்ட ஆல்பம், அதை அவளிடம் வைத்துவிட்டு அவளுக்கு ஒவ்வொரு போட்டோவாக காட்டி அது எப்பொழுது எடுத்தது, எந்த தருணத்தில் எடுத்தது என்று விளக்கிக் கூறிக் கொண்டிருந்தான், அதில் விஜயும் ஜனனியும் இருந்தார்கள் ஆனால் வித்தியாசமான மிகவும் இளமையாக இருந்தபடியால் ஹனிகாவால் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை, அதைக் கண்ட விஜயோ
”இதப்பாரு இதான் உன் அம்மா ஜனனி பாரு, எவ்ளோ சின்ன பொண்ணா க்யூட்டா ஸ்லிம்மா இருக்காள்ல பாரு பாரு” என காட்ட அவளுக்கு அது வேறு யாரோவாக தெரியவே அவள் மற்றதைப் பார்க்க
”அதுசரி உங்கம்மாவை குண்டு பூசிணிக்காவா பார்த்தே உனக்கு பழகிடுச்சில்ல” என சொல்ல அதைக் கேட்ட ஜனனிக்கு கோபமே வந்தது
”படுபாவி நானாடா குண்டு பூசிணிக்கா” என கேட்க அதற்கு கௌதமோ
”ஆமாம்கா நீ குண்டாதான் இருக்க” என வாய்விட அவனை முறைத்தாள் அதில் அவனோ
“சீ சீ இல்லைக்கா நீ அழகாதான் இருக்க, மாமாவுக்குதான் கண்ணு கோளாறு அது ஒண்ணுமில்லை, ஐடியில நல்ல அழகான பொண்ணுங்களா வேலை பார்ப்பாங்களா அவங்களைப் பார்த்து பார்த்து உன்னை குண்டுன்னு சொல்றாப்ல”
”அப்படியா”
”ஆமாம்கா” என சொல்ல அவளோ வருந்தினாள்.
விஜயோ தன் மகளிடம் மற்ற போட்டோக்களைக் காட்டினான். அதில் அவனது கல்லூரி
Indha baby ena pavam panicho adhukku puriyalanu ivaru pattukku etho pesitte porare
Thank you.