மற்றும் அமுதாவின் முகம் சுருங்கிவிட்டது, தாங்கள் பெரிய தவறு இழைத்துவிட்டது போல மனம் கலங்க அவர்களை ஆறுதல் படுத்தினார்கள் ஜனனியும் சகானாவும்
மறுபக்கம் விஜயோ தன் மகளிற்கு வேறொரு ஆல்பத்தைக் காட்டினான், அது அவனது கல்யாண ஆல்பம்
இந்த ஆல்பத்தை எல்லாம் ஜனனிதான் ரெடி செய்திருந்தாள், முக்கியமான நிகழ்வுகளில் எடுக்கப்படும் போட்டோக்களை அழகாக ஆல்பத்தில் அடுக்கியிருந்தாள், அந்த ஆல்பத்தைத்தான் தன் மகளுக்கு பெருமையாக காட்டிக் கொண்டிருந்தான் விஜய்
அதில் முதல் போட்டோவில் இருந்த விஜயையும் ஜனனியையும் யாரோவாக பார்த்தாள் ஹனிகா
”ஹனிகுட்டி என்னடா அப்படி பார்க்கற அது நான்தான்டா உங்கப்பா, அது உன் அம்மா” என சொல்ல குழந்தையோ போட்டோவையும் விஜயையும் மாறி மாறி பார்த்துவிட்டு அதை தள்ளிவிட்டு தன் தந்தையிடம் தாவியவள்
”ம்மா” என்றாள்
”ஓ உனக்கு அடையாளம் தெரியலையா சே இது என்ன கொடுமையா போச்சி, என் குழந்தைக்கே என்னை அடையாளம் தெரியலைன்னா எப்படி” என கேட்டபடியே அவளை தூக்கிக் கொண்டு அவனின் பாத்ரூம்க்குச் சென்றான்.
அங்கு கேமரா வைக்காதபடியால் ஜனனி வீட்டினருக்கு ஏமாற்றமாகிப் போனது
”விஜய் என்ன செய்றாரு தெரியலையே ஏன்டா கௌதம் அங்கயும் கேமரா வைக்கறதுதானே“
”நீயாக்கா இதை சொல்றது முதல்ல கேமரா வைச்சதே தப்புன்னு சொன்னியே“
”ஆமாம் சொன்னேன் ஆனா இப்ப விஜய் என்ன செய்றார்ன்னு தெரியலையே பாப்பாவையும் கூட்டிட்டுப் போயிருக்காரு”
”ஒண்ணும் ஆகாதுக்கா பயப்படாதக்கா அப்படி குழந்தைக்கு ஏதாவது ஆச்சின்னா நீ அவரை சும்மாவா விடுவ, எல்லாம் அவர் பார்த்துக்குவார்க்கா” என சொல்ல ஜனனியும் டிவியையே பார்த்துக் கொண்டிருந்தாள், நேரம் ஓடிக் கொண்டிருந்தது முழுதாக அரை மணி நேரம் கழித்து தந்தையும் மகளும் கலகலவென சிரித்தபடியே வெளியே வந்தார்கள்,
ஜனனியும் மற்றவர்களும் என்னவென உன்னிப்பாகப் பார்த்தனர், அதில் விஜய் நீட்டாக ஷேவ் செய்திருந்தான் அழகாகவும் இருந்தான். அதை குழந்தையிடம் காட்டி மகிழ அவனின் அழகில் ஜனனி சொக்கிக் கொண்டிருந்தாள். சகானாவோ
”ஷேவ் பண்ணதும் அண்ணா அழகா இருக்காரு இல்லைக்கா” என சொல்லிவிட்டு ஜனனியை பார்க்க ஜனனியோ விஜயையே காதலாக பார்க்க சகானா புரிந்துக் கொண்டாள். உடனே அவள்
Indha baby ena pavam panicho adhukku puriyalanu ivaru pattukku etho pesitte porare
Thank you.