இவனை சேர்த்துக்காதடா புரியுதா” என சொல்ல அதைக் கேட்ட ஜனனியின் வீட்டினர் அதிர்ந்து கௌதமை பார்க்க அவனோ எச்சில் விழுங்கிக் கொண்டு பயத்தில் ஒடுங்கிக் கொண்டிருந்தான்.
அவனின் பயத்தைக் கண்ட அனைவருக்கும் ஆச்சர்யமும் சந்தேகமும் எழுந்தது. அமுதாவோ விஜயின் பேச்சை பொய் என நினைக்காமல் உண்மையாகவே பாவித்தார், கௌதம் என்ன செய்திருக்கிறான் என்பதை தெரிந்துக் கொள்ள அவரும் ஆர்வமாக இருந்தார்.
சகானாவோ தன் கணவனை சந்தேகமாக பார்க்க அவன் உடனே கலவரமாகி சட்டென எழுந்து
”சரி சரி போங்க போங்க நேரமாகுது, டிவி எதுக்கு நான் ஆப் பண்றேன் நான்தான் சொன்னேன்ல மாமா என்னை பத்தி தப்பு தப்பாதான் சொல்வாருன்னு, அவருக்கு என் மேல கோபம் அவ்ளோதான் இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க போங்க போங்க” என சொல்ல யாரும் ஒரு இன்ச் கூட அசையவில்லை, தனது பேச்சு எடுப்படாமல் போகவே கலக்கத்துடன் அவர்களிடம் கெஞ்சினான்
”போதும் எல்லாரும் போங்க” என அன்பாகச் சொல்ல அதற்கும் யாரும் மசியவில்லை மாறாக அவனின் செயலால் அவர்களின் சந்தேகம் அதிகமாகியது. அவர்கள் தன்னை சந்தேகமாக பார்ப்பதைக் கண்டு தனது கதை இன்றோடு முடிந்துவிட்டது என நினைத்து ஓரிடத்தில் அமர்ந்துக் கொண்டு கலக்கத்துடன் டிவியைப் பார்த்தான்.
விஜயோ தன் மகளிடம்
”இந்த கௌதம் இருக்கானே இவன் ஒண்ணா நெம்பர் ப்ராடு பையன், இவன் செய்யாத தப்பே இல்லை, ஒரு கெட்ட பழக்கத்தையும் விடாம எல்லாத்தையும் கத்துக்கிட்டு குட்டிசுவரா போனவன், இவன் காலேஜ்ல அதுவும் என்ன அது விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்ததில இருந்து இவன் போட்ட ஆட்டம் இருக்கே, இவனால கடைசியில நான் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் வந்தேன், படுபாவி ஜனனியோட முகத்துக்காகத்தான் இவனைப் பத்தி யார்கிட்டயும் சொல்லாம இருந்தேன், என் கல்யாணத்துக்கு கூட இவனை நான் கூப்பிடக் கூடாதுன்னு இருந்தேன், இந்த ஜனனிதான் கேட்கலை, அது இதுன்னு பேசி அவனை வரவழைச்சதோட விடாம சாட்சி கையெழுத்து போட வைச்சா அதுவே எனக்குப் பிடிக்கலை தெரியுமா, எல்லாமே உங்கம்மாவுக்காகதான்டா பொறுத்துப் போனேன்” என சொல்ல
ஜனனியோ கௌதமை பார்த்து
”என்னடா இவர் இப்படி பேசறாரு என்னடா செஞ்சித் தொலைச்ச சொல்லுடா” என கேட்க அவனால் பேசவே முடியவில்லை, அவன் தடுமாறினான், அவனின் முகத்தில் தெரிந்த ரியாக்ஷனை வைத்தே அவள் புரிந்துக் கொண்டாள், விஜய் சொல்வது அக்மார்க் உண்மையென்று அதனால் அவள் டிவியின் பக்கம் தன் கவனத்தை விட்டாள்.
Indha baby ena pavam panicho adhukku puriyalanu ivaru pattukku etho pesitte porare
Thank you.