(Reading time: 7 - 13 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

                    யோசனையுடன் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினான் முகிலன்.

                    “நீங்க சின்ன வயசுல உங்களுக்கு நடந்த ஒரு அனுபவத்தைப் பத்திச்  சொன்னதும் இப்ப இதுவும் ஒரே மாதிரி ஒத்துப் போகுது பார்த்தீங்களா முகி?”

                    “யெஸ்...அந்த அப்பார்ட்மெண்ட் எங்க இருக்குன்னு சொல்லு!...இந்த “விஸ்வா டவர்ஸ்” பிரச்சினையைத் தீர்த்திட்டு...நான் அடுத்ததா அங்க போறேன்!” முகிலன் சந்தோஷமாய்ச் சொல்ல

                    “ம்..அதுக்காகத்தானே உங்களை வரச் சொன்னதே?”

                    “எனிவே...நாட்டுல இப்ப நெறைய பேய்க வெளிய நடமாட ஆரம்பிச்சிடுச்சுக போலிருக்கு!...மனுஷன் காடுகளை அழிச்சு குடியிருப்புப் பகுதியாக்கிட்டு அப்புறம் “அய்யோ எங்க ஏரியாவுல யானை வருது!...புலி வருது!...சிறுத்தை வருது!”ன்னு கூவற மாதிரி இனிமே மக்கள்

       “அய்யோ எங்க வீட்டுக்குப் பேய் வருது!...பிசாசு வருது!”ன்னு கூவிக்கிட்டுப் போய் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணப் போறாங்க!...”சொல்லி விட்டுச் சிரித்தான் முகிலன்.

                    ராதிகாவும் உடன் சேர்ந்து சிரித்தாள்.

தொடரும்...

Next episode will be published on 6th Apr. This series is updated weekly on Tuesdays.

Go to Neeyaga naan naanaga nee story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.