இதுக்கெல்லாம்!"
" நேரம் வரும்போது நான் சொல்றேன். " என்று அவனை அனைத்துக் கொண்டாள்
அவள், அவனுக்காக வாங்கிய டிரஸ்ஸை அவனிடம் கொடுத்தாள். அவன் தயங்கினான், "நான் உன் நண்பர்கள் எல்லோருக்கும் வாங்கியிருக்கேன், நீயே அவங்களுக்கு கொடு!" என்றாள்.
"ஏம்மா, அவங்களுக்கு நீங்க அம்மா இல்லையா? நீங்களே கொடுக்க மாட்டீங்களா? அவங்களுக்கும் அம்மா அப்பா இல்லம்மா!"
"ஐயோ அப்படியில்லப்பா, அவங்களுக்கும் நான் அம்மாதான், நீ இத வாங்கிக்க, இன்னிக்கு உன் பிறந்த நாள் அதனால நீ கொடுக்கனும்னு ஆசை பட்டேன் அவ்வளவு தான். "
நிக்கத் அவர்கள் அருகில் வந்தார், " அட கேக் ரெடியா இருக்கு வந்து ரெண்டு பேரும் வெட்டுங்க!" என்றார்.
" அதுக்கு முன்ன, இங்க வா தனம்," என்று அழைத்தார்.
அவள் வந்தவுடன் அவள் கழுத்தில் தான் கொண்டு வந்த நெக்லேஸ் செட்டை போட்டு விட்டார், தனமோ "ஐயோ ஆன்டி என்னதிது? "
"நீ என் மகதானே, அப்ப நான் கொடுத்தா வாங்கனும்!"
"ஆன்டி, இது ரொம்ப காஸ்லியானது, எனக்கு தங்க நகையெல்லாம் அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்ல, அதனால எனக்கு வேண்டாம் ஆன்டி பிளீஸ்......"
"அதெல்லாம் சொல்ல கூடாது, பெண்கள் எல்லாம் தங்கம் நகையா போட்டுக்கனும் அதான் நல்லது, அதனால கொடுக்கறத வேண்டாம்ன்னு சொல்லக் கூடாது,"அவளுக்கு அணிவித்து ஆசி வழங்கினார்.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனம்!" என்றார் நிக்கத்
அதற்குள் அஜய், "ஐயோ பாட்டிம்மா, பிறந்த நாள் அம்மாக்கில்ல, எனக்கு."
"இல்ல ராஜா , உங்கம்மாவுக்கும் தான்!"
" ஹ்ம்! நிஜமா?" என்று ஆச்சரியமாக தனத்தை பார்த்தான் அஜய்.
"ஆமாம்!” என்று கண்களில் கண்ணீருடன் சிரித்தாள்.
"பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஹாப்பி பா்த்டே . .அம்மா!"
"ஸேம் டு யு அஜய்! இனி நீ எல்லா சந்தோஷத்தோடவும் இருக்கனும்!”
" அப்பாவும் கிடைச்சுட்டா, எனக்கு எல்லா சந்தோஷமும் கிடைச்சுடும்" அதை கேட்டவுடன் மூன்று பேரும் ஷாக் ஆகினா்.
“நீ நினைக்கிற மாதிரியே உங்க அப்பாவும் சீக்கிரமே நம்மோட வந்து சேர்ந்துடுவாரு, நீ கவலபடாதே!” தன் மகனை தேற்றினாள்.
ஜாஃபரும், நிக்கத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.