இங்கேயே இருக்க, இம்ரானும், பானுவும் தூங்கிட்டாங்களா?"
"தூங்கிட்டாங்க அம்மி, நீங்க எங்கே போனீங்க?"
"நாங்க ஒரு பர்த்டேக்கு போனோம். "
"யாருக்கு பர்த்டே அம்மி, எனக்கு தெரியாத யாருக்கு?"
"உனக்கு தெரியாதுன்னு யார் சொன்னாங்க, நம்ம சிங்கர் அஜய் இல்ல அவனுக்குத்தான்."
அஜய் என்ற பேரைக் கேட்டவுடன், அப்துல், முகம் ஒரு மாதிரியாக போயிற்று.
நிக்க்கத்துக்கு மனது கஷ்டமாக இருந்தது.. இவன் மனதை வேதனைப் படுத்திவிட்டேன், இதற்கு வழிதான் என்ன, என்று அவர் அல்லாவிடம் வேண்டினார்.
"என் கிட்ட சொல்லியிருக்கலாமில்ல நானும் பிள்ளைங்கள கூட்டிட்டு வந்திருப்பேன்," என்றான், அவன் மனதில் அஜயை பார்க்க வேண்டுமென்று ஆசை , ஆனால் ஒரு வித பயமும் இருந்தது,
உலகம் தன்னை எப்படி பேசும் , அறியாத வயதில் தெரியாமல் செய்த தவறை எவ்வளவு பேர் புரிந்துக் கொள்வார்கள்...
ஆனால் இந்த தவறுக்குப் பலி, தனமும், அஜயும் தான். பாவம் நான் எப்படி இதை இத்தனை காலமும் அறியாமல் இருந்தேன். என்ன ஒரு மனுஷன் நான், இதை எப்படி சரி செய்ய போறேன், ஹே அல்லா எனக்கு ,ஒரு வழியைக் காமிங்க, என் சிநேகிதி தனம் அவளை நான் எங்கே தேடுவேன், எப்படி தேடுவேன், அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும், அவள் என்னை மன்னிப்பாளா தெரியவில்லையே... வெறும் மன்னிப்பால் இதை சரி கட்ட முடியுமா என்ன, அவ்வளவு சின்ன தப்பையா செய்திருக்கிறேன் நான்.
"என்னப்பா தூங்கலியா? போய் தூங்கு! " என்றார் நிக்கத்.
"எப்படிம்மி தூங்குவேன், எனக்கு வாழ்க்கையில் தூக்கம் வருமா? என் சிநேகிதி தனத்தை படு குழியில் தள்ளி விட்டு, அதை எனக்கே தெரியாமல் மறந்து விட்டேனே, எனக்கு எப்படிம்மி தூக்கம் வரும்," என்றான்.
"புரியுது அபூ, நீ சின்ன வயதில் செய்த தவறாயிருந்தாலும், அந்தப் பெண்ணுக்குத்தான் வாழ் நாளைக்கும் கஷ்டம், இதை அல்லாதான் சரி செய்யணும், எல்லாத்துக்கும் நேரம் வரும்போது அல்லா சரி செய்வார் நீ கவலைப் பட்டு ஒன்னும் ஆகப் போவது இல்லை. இப்போ போய் தூங்கு." என்று அறிவுரித்தினார், மனதில் வேதனையை மறைத்துக் கொண்டு..
அடுத்தநாள், தனம் தன்வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள், குழந்தைகள் எல்லாம் ஸ்கூலுக்கு கிளம்பிவிட்டார்கள், சுமதி சமையலும், டிபனும் எல்லோருக்கும் ரெடி செய்தாள். தனமும் கூடவே அவளுக்கு உதவி செய்தாள்.
அவள் குழந்தைகள் ஸ்கூலுக்கு கிளம்பியவுடன், இவளும் வேலைக்கு கிளம்பிப்