அதனால் ஜாபருக்கு கால் செய்திருந்தாள்.
ஃபோன் எடுக்கவில்லை, திரும்பி திரும்பி கால் வந்ததனால் போனை எடுத்தார்.
"அங்கிள் உங்க மருமக இறந்துட்டாங்கன்னு கேள்விப் பட்டேன், அது உண்மையா?"
" ஆமாம்மா, ஆனா நீ வரவேண்டாம் நான் பிறகு பேசறேன் உன்னோடு,." என்று கட் செய்துவிட்டார். தன் மகனுக்கு இந்த பாரம் போரும் இப்போதைக்கு.
தன் குழந்தைகளை பார்க்க உள்ளே சென்றான். அப்போது, நிக்கத்தின் மடியில் தன் குழந்தைகள் அழக்கூட தெரியாமல் படுத்துக் கிடந்தார்கள்.
அருகில் சென்றான் இரு குழந்தைகளையும் அள்ளி அனைத்துக் கொண்டான், “அம்மி.." என்று அழுதான் அப்துல்.
நிக்கத் அவனை அனைத்துக் கொண்டு, மௌனமாக கண்ணீர் உகுத்து, "மேலே நடக்க வேண்டியதை பாருப்பா!"
' அவ ஏன் அவங்க அண்ணன் வீட்டுக்கு போனா அம்மி?"
" அவ போவேன்னு பிடிவாதமா போய்ட்டா ராஜா, நான் சொன்னேன், நீ வந்தவுடன், உன்கிட்ட சொல்லிட்டுப் போன்னு, என்ன செய்ய? அவ நேரம் அப்படி அவள கூட்டிருக்கு, போய் மேலே ஆக வேண்டியது பாரு, அபூ"
" நான் இம்ரான கூட்டிப் போறேம்மி!"
" சின்ன பையன்டா,அவன்."
"இருக்கட்டும்மி, அவளோட மகன் அம்மி அவன். அவன் வரட்டும்! "
'சரி, உன் இஷ்டம்! "
அவன் பாத்ரூமிற்குள் சென்று குழாயை திறந்து விட்டு அழுதான், சிறுது நேரத்தில் தன்னை சரிபடுத்திக் கொண்டு வந்தான்.
"இம்ரான் வா, ஏதாவது சாப்பிட்டியா?"
நிக்கத்தைப் பார்த்தான், " அவன் பால் குடிச்சான்பா, பானுவும், பால் குடிச்சா."
"ஏன் அம்மி ஏதாவது சாப்பிட குடுக்கலாமில்ல?"
"கொடுத்தேன் ஆனா அவங்க சாப்பிடல்ல."
அவன் உள்ளே சென்று ரெண்டு கிண்ணத்தில் சீரியல் போட்டுக் கொண்டு வந்தான்." ரெண்டு பேரும் சாப்பிடுங்க! "
"இல்ல வாப்பா, எங்களுக்கு வேண்டாம் !"
"சாப்பிடுங்க!" என்று அவனே ஊட்டிவிட்டான்.
பிறகு அவர்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள். " நீ எதானா சாப்பிட்டியா அப்துல் ?”என்று நிக்கத் தன் மகனைக் கேட்டார்,