அவன் வெறும் தலையை மட்டும் ஆட்டினான் இல்லை என்று, " நீயும் ஏதாவது சாப்பிட்டு போ ராஜா!"
"இல்லம்மி வேண்டாம்!" என்று கூறிவிட்டு தன் மகனைக் கூட்டிக் கொண்டு போய்விட்டான்.
தனத்துக்கு மனது வேதனையாக இருந்தது, ஏனோ அவளுக்கே தெரியவில்லை, தனக்கு முக்கியமானவங்க யாரோ வேதனையில் இருக்கிற மாதிரி ஒரு பீலிங், ஏன்னு தெரியவில்லை., யாருக்கு, என்ன பிராப்ளம், ஒரு வேளை அம்மா அப்பாவுக்கு ஏதாவது? என்று பலதும் நினைத்துக் குழம்பினாள்.
" என்னம்மா ரொம்ப ஒரிட்டா இருக்க?"
"தெரியல, எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க யாருக்கோ ஏதோ பெரிய ப்ராப்ளம், அது போல என் மனசு பட படவென்று இருக்கு, அழனும் போல இருக்கு," என்று கண்ணில் கண்ணீருடன் தன் மகனிடம் கூறினாள்.
"யாரு ரொம்ப வேண்டப் பட்டவங்க,
உனக்கு யார் யார் என்று எல்லோரைப் பற்றியும் யோசித்துப் பார். "
"நீ, உங்க அப்பா,எங்க அம்மா அப்பா அவ்வளவுதான், வேறு யாருமில்லை." என்றாள் தனம்
" நான் இங்கேதான் இருக்கேன், அப்பா?..... எங்கே என்று தெரியல, உங்க அம்மா அப்பா என்று கூறி நிறுத்தினான்.... போன் நம்பர் இருந்தா கால் செய்ம்மா, இத்தன வருஷத்தில நீ பாட்டி தாத்தான்னு போன் செய்யல, போய் பார்க்கல ஏம்மா?"
"நீ இத்தனை நாளா சின்ன பையன், இப்போ மெடிக்கல் காலேஜுக்கு போகப் போற, அதனால உன் கிட்ட நிறைய விஷயம் சொல்லணும், எனக்கும் இதெல்லாம் சொல்ல யாருமில்ல," என்று நிறுத்தினாள்.
பிறகு தன் வாழ்க்கையில் நடந்த எல்லாம் கூறினாள், "எனக்கு வயது பத்தாது என்று சொல்வதை விட அப்போது அதை புரிந்துக் கொள்ளும் அளவு விவரம் இல்லை. அம்மாவும் அப்பாவும் என்னைக் கேவலமாக பேசினார்கள், தவறு செய்தேன் தான் அதுக்காக என்னை ரொம்ப கேவலப் படுத்திட்டாங்க, அதனால படிப்பு ஒன்னுதான் என் வாழ்க்கை, என்று வீட்டை விட்டு வந்து விட்டேன். "
"நீ எங்கிருக்கே என்று எனக்குத் தெரியாது, நீ இருப்பதே......" என்று நிறுத்தினாள்.
"பரவாயில்லம்மா, சொல்லு!"
"திடீர்னு உன் போட்டோவை பேப்பர்ல பார்த்தவுடன், எனக்கு பழைய ஞாபகமெல்லாம் வந்தது."
' அது சரி, என்ன தான் நீ குழந்தைலேர்ந்தே பார்க்கலியே, எப்படி அது நான்தான்னு கண்டுபுடிச்சே?"