" இல்ல, எல்லோரையும் பார்க்கணும் போல இருக்கு.”
“ நம்ம கிளாஸ் சரஸ்வதி இங்கே தான் இருக்கா, ரொம்ப சந்தோஷண்டா, எல்லோரையும் ஞாபகம் வச்சு வந்திருக்கியே!' என்றான்.
அப்துலுக்கு கூச்சமாக இருந்தது, " சரிடா நான் அடிக்கடி வருவேன், பாக்கலாம், நான் கிளம்பறேன்!" என்று கூறி கிளம்பினான்.
"சரிடா வரச்சேல்லாம் என்னை வந்து பாரு மறக்காதே!" என்று கூறி அனுப்பிவைத்தான்.
"சரிடா போயிட்டு வரேன், அடுத்த முறை வரச்சே சரஸ்வதியை பார்க்கறேன்," என்றான் அப்துல்.
ஊர் போய் சேர்ந்தான். அப்போது வீட்டு வாசலில் கூட்டமாக இருந்தது. என்ன நம்ம வீட்டு வாசலில் ஒரே கூட்டமாக இருக்குதே என்று யோசித்துக்கொண்டே போனான்.
காரை நிறுத்திவிட்டு, அங்கே நின்றிருந்த சமியுல்லஹ்விடம் கேட்டான் ‘என்ன கூட்டம்?” என்று, உள்ளே கை காட்டி விட்டான், உள்ளே சென்றான் வாப்பாதான் முதலில் அவனிடம் வந்து விஷயத்தை கூறினார் "என்ன வாப்பா, என்ன ஆயிற்று, அம்மி எங்க?" என்றான் தன் அம்மாவுக்கு என்னவோ என்று பயந்துக் கொண்டே
"அம்மி உள்ளதான் இருக்கா. ஆனா, ஆமிரதான்..."
"ஏன், ஆமிராவுக்கு என்ன ஆச்சு?"
" அவள் தான், அவ அண்ணன் வீட்டுக்குப் போறேன்னு கிளம்பி போனா, அவள் போன பஸ் அக்சிடென்ட் ஆயி அவ ஸ்பாட்லயே இறந்துட்டா!" என்றார்
அவன் இடிந்து விட்டான், "விபத்துலியா, என்ன வாப்பா சொல்றீங்க?"
"ஆமா, உனக்காகத்தான் காத்துகிட்டிருக்கோம், ஆஸ்பத்திரிக்கு
போய் ஆமிராவின் சடலத்தை வாங்கனும்."
அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
"இம்ரானும், சாயிராவும், எங்க வாப்பா?"
"இங்கதான் அம்மியோடு இருக்காங்க, நாம ஆஸ்பத்திரியிலிருந்து நேரே இடுகாட்டுக்குப் போய்டுவோம்."
"இம்ரானை கூட்டுக்குவோம்!" என்றான் அப்துல்.
" சின்னப் பையன்டா !"
"அவளோட மகன் வாப்பா, அவன் வரட்டும் பரவாயில்ல!"
"சரி ராஜா!"
தனத்திடமிருந்து போன் வந்தது ஜாபருக்கு, நிக்கத்தின் போன் சுவிட்ச் ஆப்ல இருந்தது,