போனா?"
"பாட்டி அதெல்லாம் நாங்க ஏற்பாடு செய்வோம் கவலப் படாதீங்க , நீங்க சென்னைல வந்து செட்டில் ஆயிடுங்க. சித்தி ரெண்டு பேருக்கும் அம்மா கல்யாணம் ஏற்பாடு செய்வாங்க. செலவெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்!" என்றான் அஜய் பெரிய பையன் போல் பொறுப்பாக, அவன் எப்பவுமே வயதுக்கு மீறின பக்குவத்துடன் இருப்பவன்.
"சரிப்பா, நீங்க எல்லாம் பார்த்துக்கறீங்கன்னா சரி! " என்று கூறினார் தனத்தின் அப்பா சாமிநாதன்.
"ஊரை சுத்தி பார்க்கலாம் வாம்மா!" என்று அழைத்தான் அஜய், தனத்திடம்.
அவளுக்கும் ஊரை சுற்றி பார்க்க ஆசையாக இருந்தது .
அவர்கள் இருவரும் ஊரை சுற்றி வந்தார்கள். எல்லா இடத்தையும் சுட்டி காண்பித்தாள், தான் பிறந்து வளர்ந்த ஒவ்வொரு இடமாக அவனுக்கு காண்பித்தாள். தன் ஸ்கூலையும் அவனுக்கு காண்பித்தாள் "இங்கதான் நீ, அப்பா ரெண்டு பேருமே படிச்சீங்க இல்ல?" என்று அவன் கேட்கவும் அவள் முகம் மாறியது அவள் உடம்பு விறைப்பாகியது, " என்னம்மா என்ன ஆச்சு ?" என்று அவன் கேட்டவுடன் , அவள் தன்னை சரி படுத்திக்க கொண்டாள் .
"சரி வா தோப்பு பக்கம் போலாம் " என்று திரும்பி வரும்போது அந்த பக்கம் சரஸ்வதி வந்துக் கொண்டிருந்தாள். தனத்தை பார்த்த சரஸ்வதி, "நீங்க தனலட்சுமியா?" என்று கேட்டாள் .
"ஆமாம் நீ....?"
"ஏய் நான் சரஸ்வதி, நீ ரொம்ப மாறிட்ட, ஆனா உன்னோட கம்பீரம், உன் முகத்துல ஒரு நம்பிக்கை அது அப்படியே இருக்கு அதான் நீயாதான் இருப்பியோன்னு கேட்டேன் "
"அட நானே தான் சரஸ்வதி பரவாயில்லையே என்ன ஞாபகம் வச்சிருக்கியே? நீ எப்படி இருக்க?"
"இதோ பாக்கரியே எனக்கு ரெண்டு பொண்ணு, புருஷன் சரியில்ல ஏதோ பொழப்புக்கு கஷ்டப் பட்டுண்டுருக்கேன் , என் கஷ்டத்த வுடு, நீ எப்படியிருக்க சொல்லு ?"
"நான் என்ன, சென்னைல ஒரு கம்பெனில வேலை பண்ணிண்டிருக்கேன். "
"சரி நம்ம ஸ்கூல்ல படிச்ச எல்லோரிலும்,, நீயும் அப்துலும்தான் சென்னைல இருக்கீங்க, மத்த எல்லோரும் இங்கேயும் பக்கத்தூரிலியும் தான் இருக்காங்க! "
"அப்படியா?" என்று அப்துல் பேரை கேட்டவுடன், அவளது குரல் இறங்கிவிட்டது.
"என்ன ஒரு மாதிரியாயிட்ட ?"
ஒண்ணுமில்ல, நீ கஷ்டப் படறேன்னு சொன்னேயில்ல, அதான் யோசிச்சிட்டிருந்தேன் , சரி சொல்லு உனக்கு நான் என்ன பண்ணனும்?"
"ஒன்னும் வேண்டாம், வாயேன் வீட்டுக்கு என் பிள்ளைங்களை பார்த்துட்டு போயேன், " தனம்