"என்ன சொல்ற அஜய் உனக்கு பிடிச்சுதா சொல்லு? அதுக்கு அப்புறம் தான் நான் ஜாஃபர் அங்கிள் கிட்ட பேசணும், அவரே ஐயா கிட்ட பேசி முடிவு பண்ணறேன்னுட்டாரு, நீ உன்னோட முடிவை சொல்லு?"
"எனக்கு இதை பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாதும்மா, நீயும் மாஸ்டரும் முடிவு பண்ணுங்க எனக்கு இந்த ஊரும் இந்த நிலமும் இந்த அட்மாஸ்பியரும் பிடிச்சிருக்கும்மா, இனி எல்லாம் உன்னோட இஷ்டம். அம்மா எனக்கு இங்க நீ, நான், அப்பா மூணு பேரும்... " சொல்லி பேச்சை நிறுத்தினான், அவன் கண்களில் லேசாக கண்ணீர் வரட்டுமா வேண்டாமா என்றிருந்தது, அதை பார்த்தும் பார்க்காமலும் மாதிரி தனம்,
"சொல்லு அஜய்!" என்ற அவளுக்கும் மனது வலித்தது. அவள் கண்களும் தளும்பியது, ஆது நீ எங்கிருக்க? நானும், உன் பையனும் உன்னை ரொம்ப மிஸ் பண்றோம்டா ப்ளீஸ் வந்துடு, எங்களோடு வந்துடு, வந்து சேர்ந்துடு ப்ளீஸ் ....' என்று மனதுக்குள் போராடிக் கொண்டிருந்தாள்.
"ஒன்னுமில்லம்மா எனக்கு பிடிச்சிருக்கு!" என்று பேச்சை மாற்றினான்.
"சரி நான் அங்கிள் கிட்ட பேசறேன், அவர் முடிவு பண்ணட்டும்." என்று தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு பாங்கில் லோன் வாங்கலாம் என்று ஒரு கணக்கு போட்டுக் கொண்டாள்.
தனுஷ்கோடியிடம் " ஐயா, நான் ஜாஃபர் அங்கிளை, உங்ககிட்ட பேச சொல்றேன், " என்றாள்.
"சரிம்மா, உங்களுக்கு பிடிச்சிருக்கு இல்ல ? "
"ஆமாம் ஐயா அஜய்க்கு பிடிச்சிருக்கு, அதனால அங்கிளிடம் நான் பேசறேன். அவர் உங்களிடம் பேசுவார். நாம ரெஜிஸ்டரேஷன் எப்போ வச்சுக்கலாம்னு நீங்க சொல்றீங்களோ அப்போ நாங்க வரோம்!" என்றாள் தனம்.
"சரிம்மா! "
அவர்கள் காரில் போகும்போது ஜாபருக்கு போன் செய்தாள் " அங்கிள், நாங்க நிலத்தை பார்த்தோம் அஜய்க்கும் எனக்கும் பிடிச்சிருக்கு, இனி ஐயாவிடம் நீங்க பேசுங்க!"
"சரிம்மா அது போதும், நானே பேசி எல்லாம் செட்டில் பண்ணிடறேன், நீங்க நாளைக்கே வேண்ணா ரெஜிஸ்ட்ராக்ஷன் முடிச்சிடுங்க. "
"அங்கிள் ரெஜிஸ்ட்ரக்ஷன் நீங்க இல்லாம நாங்க பண்ண முடியாது, அது மட்டுமில்ல, நான் பணம் கொஞ்சம் அரேஞ் பண்ணனும், அதனால கொஞ்சம் டைம் வேணும்."
"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்மா, என்கிட்ட அஜயோட பணம் இருக்கு கொஞ்சம் குறையுது, அதை பத்தி பிறகு பார்க்கலாம், இப்போ ரெண்டு பேரும் அங்க இருக்கீங்க அதனால ரெஜிஸ்டர் பண்ணிடுங்க, அவங்க வீட்டை எப்போ வேண்ணா காலி பண்ணட்டும், அவங்க