கொண்டே கூறினான், அப்துல்.
"நா யார் ஜாடைல இருக்கேன் இந்த ஹீரோவோட பையன்தான் நான், அதான் ஹீரோ மாதிரி இருக்கேன்."
அப்துலின் கண்ணில் நீர் முத்து எட்டி பார்த்தது, " ஐ அம் சாரிடா இவ்வளவு இரெஸ்பான்சிபிள் டாட்டா நான், எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு, உன்னையும் உன் அம்மாவையும் தவிக்க விட்டு நான் போயிட்டேன், மத்தவங்க என்ன நினைப்பாங்க அந்த சின்ன வயசுல செய்ய கூடிய தப்பையா பண்ணியிருக்கேன், உங்க அம்மா பாவம் மத்தவங்களோட ஏச்சு பேச்செல்லாம் கேட்டுகிட்டு எப்படியிருந்திருப்பா, நான் என்ன பண்ணா அவளோட இந்த அவமானத்தை களைய முடியும் எனக்கு தெரியலையே ? உன்னோட சின்ன வயசுல பாவம் உனக்கு பெத்தவங்க இல்லாம நீ எப்படி வளர்ந்த அஜய், சாரிடா நான் ஒரு நல்ல தகப்பனே இல்லைடா."
"என்ன டாட் இது, எப்ப பார் உங்கள குறை சொல்லி உங்கள நீங்களே தாழ்த்திக்கறீங்க, உங்களுக்கு விவரம் தெரிஞ்ச வயசுல அப்படி செய்ஞ்சிருந்தீங்கன்னா, அதுதான் தப்பு. இது விவரம் தெரியாத வயசுல செய்ஞ்ச தப்பு, விட்டு தள்ளுங்க, நடந்தது நடந்து போச்சு இதை எப்படி சரி செய்யறதுன்னுதான் பார்க்கணும், அதை விட்டுட்டு உங்களை நீங்களே குறை சொல்லிட்டே இருக்காதீங்க, எனக்கென்ன, மாஸ்டர் எனக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்திருக்காங்க, நான் நல்லாத்தான் இருக்கேன்"
"அது தெரியும்பா, இந்த வயசுல இப்ப நினைச்சா நான் செய்த வேலை என்ன கூச வைக்கறது, எந்த வயசுலயும் ஒரு கட்டுப்பாடு வேணாம்? இப்படியா, இதனால நான் கஷ்டப் படலியே தனம்தானே கஷ்டப் பட்டாள், என்ன சமாதானம் சொன்னாலும், இதுக்கு மன்னிப்பே கிடையாது அல்லா என்ன மன்னிக்கவே மாட்டார், " என்று புலம்பினான்.
"சரி டாட், நீங்க இப்ப பழைசை நினைச்சு புலம்பறதால ஒன்னும் பண்ணமுடியாது. இனி அம்மாகிட்ட பேசி எப்படியாவது கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க வேண்டியதுதான், இதுதான் தீர்வு."
"சரி கல்யாணத்துக்கு தனம் ஒத்துக்கணும்?"
"ஹ்ம்ம் கரெக்ட் பார்க்கலாம், நீங்க மாஸ்டர்கிட்ட பேசிட்டீங்களா? அவங்களுக்கு தெரியுமா?"
"வாப்பாக்கு தெரியும், அம்மீகிட்ட இன்னும் பேசல, எனக்கு என் அம்மீயும், வாப்பாவும் பிரெண்ட்ஸ் போலத்தான், ஆனா வாப்பா எப்பவும் வாப்பாதான். அம்மீதான எனக்கு குளோஸ்."
"டாட் நீங்களும் நானும், அம்மாவும் கூட பிரெண்ட்ஸாதான் இருக்கனும், டாட் எனக்கு இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா? எனக்கு என் அப்பா அம்மா ரெண்டு பேரும் கிடைச்சுட்டாங்க, ஐ அம் ஸோ ஹாப்பி டாட்!"