இருக்குமா தெரியல மாஸ்டர்."
"இல்ல நீ ரொம்ப டேலண்ட்டட், உன்னால எல்லாத்தையும் மேனேஜ் பண்ணமுடியும். அது மட்டுமில்ல உன்னோட ஹாலிடேய்ஸ்ல தான் கால்ஷீட் கொடுக்க முடியும்னு சொல்லியிருக்கேன், சரி நீ ஒரு நாள் டைம் எடுத்துக்கோ, தனத்திடமும் பேசு பிறகு முடிவு பண்ணி சொல்லு, அபூ இருக்கானா ஒரு நிமிஷம் போனை கொடேன். "
"இதோ மாஸ்டர், " அப்துலிடம் போனை கொடுத்தான் .
"ஹலோ வாப்பா, சொல்லுங்க?"
"என்ன அபூ சந்தோஷமாயிருக்கியா ராஜா?"
'ஹ்ம்ம் ..." முனகினான்.
"தெரியுது ராஜா, நீ சந்தோஷமா இருக்க. சந்தோஷமா இருப்பா, உன் சந்தோஷம் தான் எனக்கும் உன் அம்மீக்கும் சந்தோஷம் கொடுக்கும்."
"தெரியுது வாப்பா...., வாப்பா நீங்களும், அம்மீயும் அஜய் வீட்டுக்கு வரமுடியுமா?"
"என்ன விஷயம் அபூ? ஏதாவது முக்கியமான விஷயமா? தனம் இருக்காளா உங்களோட?"
"இல்ல வாப்பா, விஷயம் என்னன்னு தெரியல வாப்பா, எனக்கு என்னவோ நீங்க எங்களோட வந்திருந்தா....."
"அவ்வளவுதானா தங்கம் வந்துட்டா போச்சு , சரி அப்போ அங்க பார்க்கலாம். "
"வாப்பா... நானும் அஜயும் இப்ப வெளியே இருக்கோம், வீட்டுக்கு போகச்ச உங்களுக்கு கால் செய்யறோம்."
"சரி ராஜா போன வைக்கறேன்."
நிக்கத்துக்கு போன் செய்தார் ஜாஃபர், போனை எடுத்தவுடன் "என்னங்க சொல்லுங்க? "
"நிக்கத் நான் காலைல விஷயம் சொன்னேன்ல,"
"ஆமாம் சொன்னீங்க, இப்ப என்ன ஆச்சு ஜாஃபர்"
"நம்ம அபூ இப்ப எங்க இருக்கான் தெரியுமா? நம்ம அஜய் கூட , என் அபூ இப்ப தன் குடும்பத்தோட சேர்ந்துட்டான். அவன் சந்தோஷமாயிருக்கான் நிக்கத்து!"
"ஐயோ அப்படியா! என் அபூக்கு இப்ப நிம்மதியான குடும்பம் கிடைச்சிட்டா ரொம்ப சந்தோஷமாயிருக்கு ஜாஃபர்!"
"ஆமாம் நிக்கத், நம்ம அபூ நம்மள அங்க வரச் சொல்றான் நிக்கத், நாம அங்க போயி ஆகணும், அவன் வருத்தத்துல இருக்கான் அது என்னன்னு தெரியல நிக்கத், நம்ம மகனோட நாம் இருக்கணும் நிக்கத். "
"இருக்கலாம் ஜாஃபர், போகலாம், ஆனா, நம்ம இம்ரானையும், பானுவையும் மறந்துட்டீங்களே?"
"இல்லடா மறக்கல, ஆனா அவன் சந்தோஷம் அவனுக்கு கிடைச்சுட்டா இம்ரானும், பானுவும்