(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

டாட் ,சேம் இயர்!" என்றான், அஜய் அவன் கண்களும் குளமாகி, குரல் கம்ம கூறினான்..

எல்லோரும் ஒருவரையருவர் கிண்டலடித்துக்கொண்டு பேசி மகிழ்ச்சியோடு இருந்தனர்.

அஜய்யும், அப்துலும் இம்ரான் சாயிராவோடு விளையாடிக்கொண்டும் அவர்களுக்கு படிப்பில் உதவி செய்து கொண்டிருந்தனர்.

ஏழரை மணிக்கு குழந்தைகள் இருவரையும் தூங்க அனுப்பிவிட்டாள் தனம்.

குட் நைட் மாம், குட் நைட் டாட் , குட்நைட் பையா குட் நைட்  படி மா " என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு குழந்தைகள் தூங்கச் சென்றனர்.

அஜய், அப்துல் இடம் "டாட் ஹேப்பியா இருக்கீங்களா?" என்று கேட்டான்.

"எப்படி ஹாப்பியா இருக்க முடியும் நம்ம குடும்பமே பிரிஞ்சு கிடைக்கே எப்படி தங்கம் என்னால ஹாப்பியா இருக்க முடியும் ?"எனறு கேட்டான்..

"வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு டாட் ?"என்று கேட்டான்.

அப்போது...

"அபு," என்று அழைத்தார் நிக்கத்..

" என்ன அம்மி?"

" டெலிவரி டேட் நெருங்கிண்டிருக்கு. நாளைக்கு சின்னதா வளைகாப்பு செய்யலாம் அபு. உன்னோட ஆபீஸ் நண்பர்கள் இருந்தா கூப்பிடு. அப்படியே ஹோட்டல்ல சாப்பாட்டுக்கு சொல்லிடு, நம்ம தனத்துக்கு இதுதான் முதல் வளைகாப்பு ராஜா."

தனத்தின் கண்கள் கரித்தது. நிக்கத்தை அணைத்துக் கொண்டாள்.

" நானும் ஒரு பெண்தான்டா தங்கம். ஒரு பெண்ணுக்கு உரித்தான ஆசையும், ஏக்கமும் எனக்கு தெரியாதா என்ன?" என்று அவளை அணைத்து ஆறுதல் கூறினார்.

 அன்று இரவே, தங்கள் டீம் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி விவரத்தை தெரிவித்தான், அப்துல்.

எல்லோரும் வருவதாக பதிலும் அனுப்பி விட்டார்கள்.

அடுத்த நாள், தனத்திடம், அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சேலையையும், அதற்கேற்றவாறு பிளாட்டினமும் வைரமும் ஜொலிக்கும் நகைகளையும், கொடுத்தான், அவள் மகன், அஜய்.

அவளதைப் போலவே வேலைப்பாடுகளுடன் லெஹங்காவும், ஆண்கள் மூவருக்கும் குர்த்தா செட்டும், வாங்கி வந்திருந்தான்.

அடுத்த நாள் விழா,  கோலாகலமாக, அவர்கள் வீட்டிலேயே நடந்தது. எல்லோரும், அஜயை, அப்துலின் தம்பி என்றே நினைத்தனர்.

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.