தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 02 - பிந்து வினோத்
ஆறு மாதங்கள் போனதே தெரியாமல் சுறுசுறுப்பாக ஓடிப் போனது!
மனோஜ் மஞ்சுவை கையில் வைத்து தாங்கினான் என்று சொன்னால் அது மிகையில்லை.
மனோஜ் அவளை காதலிப்பதாக சொன்னது எல்லாம் பொய்யோ, மிகையோ இல்லை என்று மஞ்சுவிற்குப் புரிந்தது.
எட்டு மணி நேரம் சம்பளம் பெறும் வேலைக்கு பதினெட்டு மணி நேரம் அயராமல் வேலை பார்ப்பவன் மனோஜ்! ஆனாலும் மீதம் இருந்த நாளின் கால் பகுதி முழுவதும் மஞ்சுவை சீராட்டி, கொஞ்சவே செலவிட்டான்!
அவனின் செல்லம் கொஞ்சல்களில் மஞ்சுவிற்கு பெற்றவர்களை விட்டு தூர தேசத்தில் இருக்கிறோம், பக்கத்தில் உறவினர், தோழமை என்று யாருமில்லை என்ற உணர்வெல்லாம் எட்டிப் பார்க்க கூட இல்லை!
மனோஜுடன் இருக்கிறாள், அது மட்டுமே அவளுக்கு போதுமானதகா இருந்தது! அதை தாண்டி அவள் அதிகமாக எதையும் யோசிக்க கூட இல்லை.
திருமணமான பிறகு, சென்னையில் இருந்தப் போதே அவர்கள் இருவருக்குள் காதல், ஊடல், புரிதல், கூடல் என எல்லாம் இருந்தது! ஆனால் அதெல்லாம் வெறும் ‘டிப் ஆஃப் தி ஐஸ்பெர்க்’ என்பதையும் இந்த தனிமையான நாட்கள் அவர்கள் இருவருக்கும் உணர்த்தியது.
தங்களுக்கு கிடைத்த இனிமை தரும் தனிமையை மனோஜ் மஞ்சு இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளவும், தங்களின் அன்பை மற்றவர்க்கு புரிய வைக்கவும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள்...!
இருவருக்கும் நடுவே பெயரளவில் கூட சச்சரவு என்ற ஒன்று இல்லாமல் இனிமையாக நாட்கள் சென்றுக் கொண்டிருந்தது!
அன்று அமுதாவிற்கு பெண் குழந்தை பிறந்த செய்திக் கேட்டு மஞ்சுவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை!
மனோஜ் வேலையில் இருந்து திரும்பியது முதல் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்.
சரவணன் அனுப்பி இருந்த போட்டோவை மனோஜிற்கு காட்டி, குழந்தையின் அழகைப் பாராட்டினாள், புகழ்ந்தாள்!
வினோதினிக்கு ஆண் குழந்தைப் பிறந்து நான்கு மாதம் ஆகி இருந்தது!
அந்த நான்கு மாத குழந்தையும், இந்த ஜஸ்ட் பார்ன் குழந்தையும் ஒரே ‘சைஸில்’ இருப்பதாக மஞ்சுவிற்கு தோன்றியது!
“எப்படி இப்படி ஒரு சப்பி பேபின்னு நான் அம்மு கிட்ட கேட்கனும் மனோஜ்!”
ஈமெயில் டைப் செய்துக் கொண்டிருந்த மனோஜ் மஞ்சு பக்கம் ஒரு புன்னகையை கொடுத்து