Page 4 of 4
அப்படியே சேத்துக்குள்ளார விட்டுட்டு ஓடிப் போயிருதேன்னா...என் கதி என்ன?...என் பொணத்தைக் கூட யாரும் கண்டுபிடிச்சிருக்க முடியாது!” என்ற தனசேகர், “எங்க உன் சட்டையைத் தூக்கி...அடி வயிற்றைக் காட்டு” என்று சொல்ல,
“எதுக்குடா?”
“சட்டையைத் தூக்குடா” தனசேகர் சத்தமாய் ஆணையிட்டான்.
தன் சட்டையைத் தூக்கி வயிற்றை முரளி காட்ட, பெரிய தழும்பொன்று அவர்களின் நட்பிற்கு அடையாளச் சின்னமாய் பதிந்திருந்தது.
“அட விடுடா...நட்புக்குள்ளே இதெல்லாம் இருந்தால்தான் அது நட்பு...இல்லேன்னா அது நட்பல்ல....துப்பு” என்றான் முரளி.
தொடரும்