என்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா
வேறேதும் வேணாமே அது போதும்
வீடு திரும்பையிலே வாசல் தொறக்கையிலே
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்”, வரிகளில் சிறிது லயித்தவளின் காதுகளில், தினேஷின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சத்தம் வாசலில் கேட்கவும் குழந்தைகள் அப்பா!அப்பா! என்று கதவைத் திறக்க ஓடவும், அவர்கள் நால்வருக்கும் முன்னதாக அவன் முதல் குழந்தையாக, அன்னையாக, அவன் தோழியாக, காதலியாக, மனைவியாக என எல்லாமுமாக இருந்த ரம்யா கதவைத் திறக்க ஓடினாள். அந்த சந்தோஷமான முகத்தையும், தன்னை அப்பாவென்று காலைக் கட்டிக் கொண்ட பாசக்குழந்தைகளின் குரல்களையும் கண்டு, கேட்டவனுக்கு இதைவிட உலகத்தில் வேறெதுவும் தேவையில்லை எனத் தோன்றியது தினேஷுக்கு. இனி வரும் காலங்களில் தினேஷ் ரம்யாவின் காதல் கதையில் என்றென்றும் அன்பும் மகிழ்ச்சியுமே அத்தியாயங்களாய் திகழ்ந்தன. முடிவில்லா இன்பங்கள் அவர்கள் வாழ்வில் தொடரட்டும்,
அவர்களின் கதையை “இதோ ஒரு காதல் கதை” என்ற தலைப்பில் எழுதிய நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
(முற்றும்)