(Reading time: 8 - 16 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

pbs! நிர்மல் செய்த கலாட்டா எனக்கும் தெரியும். எனக்கு மட்டும் கிடையாது. ஆல்மோஸ்ட் எல்லா மேனேஜர்ஸ்க்கும் தெரியும். துர்கா டைரக்ட் இம்பாக்ட் ஆனதால கோபமா இருந்திருப்பா. மத்தப்படி நிர்மல் செய்தது தப்புன்னு இல்லை...”

“அப்படியா???”

“நிர்மல் லவ் செய்ற பொண்ணு குடும்பத்துல வெளிநாட்டுல இருக்க மாப்பிள்ளை வேணும்னு சொல்லி இருக்காங்க போலருக்கு. நிர்மலும் என் கம்பெனி இங்கே இருந்தாலும், எனக்கும் வெளிநாட்டுல வேலைன்னு பொய் சொல்லி இருக்கான்...”

“அடப்பாவி!”

“இதுல என்ன தப்பு இருக்கு pbs? அதெல்லாம் நார்மல் தான்...! நிர்மல் சொன்னதை அந்தப் பொண்ணு வீட்டுலேயும் நம்பி இருக்காங்க... அதனால கல்யாண பேச்சு ப்ரோசீட் ஆக, இப்போ எங்கே வேலை அது இதுன்னு கேள்விங்க வர ஸ்டார்ட் செய்திருக்கு... அதனால அவன் வேலையை விட்டுட்டு யூ.எஸ்ல ஹையர் ஸ்டடீஸ் செய்யப் போறானாம். அதுக்கு தான் இந்த அவசர ரெசிக்னேஷன்.”

“உங்களுக்கு எப்படி இவ்வளவு விபரம் தெரிஞ்சது?”

“அவன் காலேஜ்க்கு அப்ளை செய்ய ரெகமெண்டேஷன் லெட்டர் கொடுத்த இரண்டுப் பேர்ல நானும் ஒருத்தன்!”

“இதெல்லாம் செய்திருக்கீங்க ஆனால் என் கிட்ட சொல்லவே இல்லை நீங்க??? நான் தான் லூஸு மாதிரி எல்லாத்தையும் அப்படியே உங்க கிட்ட ஒப்பிக்கிறேன்???”

“அப்படி கிடையாது pbs. இது இம்பார்டன்ட்ன்னு எனக்குத் தோணவே இல்லை... நிறைய வேலை இருக்கு. அது செய்யாத நேரத்துல நீ இருக்க... வேற எதுவுமே எனக்கு முக்கியமானதா தெரியலை...”

“ப்ச்... இருந்தாலும் உங்களுக்கும் நிர்மலுக்கும் ஒத்தே வராதே... நீங்க எப்படி அவனுக்கு ரெகமென்டேஷன் கொடுத்தீங்க???”

“சும்மா கொடுக்கலை... ஒரு கண்டிஷனோட தான் கொடுத்தேன்... சிகாகோ பக்கம் மட்டும் தப்பித் தவறி வந்திராதேன்னு சொல்லி வச்சிருக்கேன்...!!!!”

“ஹப்பா... எவ்வளவு நல்லவர் நீங்க...!!! ஆனாலும் நீங்களும் சரி, நிர்மலும் சரி, லவ்ன்னு சொல்லிட்டு கோல்மால்ல இறங்கிடுறீங்க...”

“அவனைப் பத்தி எனக்கு தெரியாது... ஆனால் நான் காதலுக்கு மரியாதை கொடுக்குறவன்...!!! என் மஞ்சுவுக்காக எந்த பொய், கோல்மால் வேணா செய்வேன்...”

“அது எனக்கும் தெரியுங்க முசுட்டு மேனேஜர்...! நிர்மல் பத்தியும் எனக்கு நல்லா தெரியும்! நீங்க சிக்காகோ வராதேன்னு சொல்லிட்டீங்கள்ல, அவன் இங்கே தான் வந்து நிற்பான், பாருங்க...”

“அவன் வரட்டும் அப்போ பார்த்துக்கலாம்... இப்போ அந்த டாப்பிக் விடு மஞ்சு... நாம கடைக்கு போயிட்டு வரலாம், வா...”

“கடைக்கா எதுக்கு? என்ன வாங்க???”

“உனக்காக வீட்டுல போன் இருக்கு... தனியா எதுக்கு இன்னொரு போன், காசு வேஸ்ட்ன்னு நினைச்சேன்... நீ இன்னைக்கு செய்த கலாட்டால பணம் போனாலும் பரவாயில்லை, கையில ஒரு போன் வச்சுக்கலாம்னு முடிவுக்கு வந்துட்டேன்... நம்ம இரண்டுப் பேருக்கும் ஒரு போன் வாங்கலாம்...”

கூடுதல் செலவு என்றவன், அவனுக்கு மட்டும் வாங்கப் போகிறான் என்று மஞ்சு நினைத்திருக்க, அவனோ இருவருக்கும் என்று சொல்லி மஞ்சுவை ஆச்சர்யப்படுத்தினான்...

இது பெரிதாக சொல்லக் கூடிய விஷயம் இல்லை... சின்னது... மிகவும் சின்னது தான்... ஆனால் அதிலும் மனோஜ் அவளுக்காகவும் யோசிக்கிறான் எனபது மஞ்சுவின் மனதிற்கு இதமாக இருந்தது...

பெரிது, சின்னது என்ற பேதமே இல்லாமல் எதிலேயும் அவளையும் சேர்த்து நினைக்கிறானே...

அவளுடைய கணவன் அவள் மீது எந்த அளவுக்கு பிரியம் வைத்திருக்கிறான்...!!!

மனம் துள்ள மகிழ்ச்சியுடனே கணவனுடன் சென்றாள்...

அப்போது மட்டுமல்லாமல் அடுத்து வந்த மாதங்களும் அதே விதமாகவே சென்றது...

மெல்ல நகர்ந்தாலும், நாட்கள் ஓடிப் போக தான் செய்தது...!!!

மஞ்சுவின் லீவ் முடியும் நாளும் அருகே வந்திருந்தது!  

தொடரும்...

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

6 comments

  • :lol: :D cool update bindu ma'am 👏👏👏👏👏👏 nirmal love kaga poi sonna okay than musudu manager panadhadha 😁😁 but ippo manju has to get back to India :sad: avangalukkum oru onsite opportunity kudungale 😍😍😍😍<br /><br />Thank you.
  • Nan kuda Manju mathiri juicy reason expect seidhene :p Kadaisila Goods trainu sollitta Binds :D<br />I thought second part is all abt M&M's life in US. Illaiya?
  • Bindu mam ennakku unga kadaigal romba podikum. Unga heroine memaiya aana stronga iruppanga. Idhuvaraikum manju appidi illaye. Enn???

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.