இருந்து கிளப்பும் முயற்சியில் ஈடுப்பட்டான் மனோஜ்.
“அசைன்மெண்ட்ஸ் செய்யனும் மனோஜ்!!! ஆமா, பயங்கரமா வாசனை வருதே? உன் குக்கிங்கா மஞ்சு??? சாம்பார்? முட்டை??? ஹப்பா வீட்டு சமையல் வாசனைப் பட்டே எவ்வளவு நாள் ஆச்சு...” என்று பேச்சின் திசையை ‘அலேக்’காக மாற்றினான் நிர்மல்!
மஞ்சுவால் இப்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை!
“நீ ஒன்னும் காற்றை வாசனை பிடிச்சு சுத்த வேண்டாம்! வா, வந்து சாப்பிடு, எல்லாம் ரெடியா இருக்கு...” என்று நண்பனை உபசரித்த மஞ்சு, சிரிப்பு மின்னும் பார்வை ஒன்றை மனோஜ் பக்கம் வீசினாள்.
“நீங்களும் சாப்பிட வாங்க மனோஜ்...”
அவளின் பார்வைக்கும், அதில் மின்னிய குறும்பு சிரிப்பிற்குமான அர்த்தம் புரிந்து செல்லமாக முறைத்த மனோஜ்,
“இல்லை எனக்கு இப்போ வேண்டாம். நிர்மல் சாப்பிட்டு கிளம்பட்டும். நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்...” என்றான்.
“என்ன மனோஜ், நிர்மல் ஹெல்ப் செய்றதுக்காக வேலை மெனக்கெட்டு வந்திருக்கான், அவனை போய் கிண்டல் செய்து ஜோக் அடிக்குறீங்க! நீங்க வேலையைப் பாருங்க, நாங்க இங்கே இருக்க வேலையை பார்க்குறோம்...” என்று பதில் சொன்னப் போதும் மஞ்சுவின் விழிகள் என்னவோ பளிச் பளிச் என்று மின்னி மனோஜை தான் ‘டீஸ்’ செய்தது!
அவளை விட்டு பார்வையை விலக்கவோ... அங்கிருந்து விலகிச் செல்லவோ மனமே வராமல் அவளையே மையலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மனோஜ்.
மஞ்சுவிற்கு மனோஜின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தது... இப்போது சிரிப்பு மட்டும் இல்லாமல் இதயமும் கனிந்தது!!!
அவனுக்காக செல்லமாக கண் சிமிட்டி விட்டு, நிர்மலிடம் பேசத் தொடங்கினாள்...
மனோஜும் வேறு வழி இல்லாமல் தன் வேலை பக்கம் கவனத்தை திருப்பினான்.
வியாழன் வந்த நிர்மல் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று தினங்களும் மனோஜ் மஞ்சுவுடனே தங்கி இருந்தான். உதவுவதாக சொல்லி அவன் அடித்த லூட்டிகளை மஞ்சு ரசிக்கத் தான் செய்தாள்! மனோஜ் மட்டும் ‘இஞ்சி தின்ற மங்கி’யாக முகத்தை உர் உர் என்று தூக்கி வைத்துக் கொண்டிருந்தான்!
அதுவும் கூட மஞ்சுவிற்கு ரசிக்கும் விதத்தில் தான் இருந்தது.
ஞாயிற்று கிழமை இரவு நேரத்தில் அதைப் பற்றி சொல்லி, மனோஜை கேலி செய்து சிரித்தாள் மஞ்சு!
“சிரிக்காதே மஞ்சு. நானே பயங்கர கடுப்புல இருக்கேன். இவன் மட்டும் இப்போவும் என் டீம்ல