இருந்திருந்தான்னு வை, அவன் காலி தான்!!!! ஏதோ அது வரைக்கும் நைட் டைம்லயாவது நமக்கு ப்ரைவசி கொடுக்குறானே! சந்தோஷம்!”
“அவன் என்ன கொடுக்குறது, நாமளே எடுத்துக்க வேண்டியது தான்...” என்று அதே சிரிப்புடன் சொன்ன மஞ்சு, அப்படியே மனோஜை மென்மையாக அணைத்துக் கொண்டாள்.
“பத்திரமா இருங்க மனோஜ். என் மனசெல்லாம் இங்கேயே தான் இருக்கும். ட்ராவல் செய்யும் போது, ரோட் க்ராஸ் செய்யும் போதெல்லாம் பத்திரம்!”
மனைவி சொன்னதற்கு தலை ஆட்டிய மனோஜின் கவனம் அவளின் பேச்சில் இல்லை. மென்மையான அவளின் கூந்தலில் விரல்களால் விளையாடிக் கொண்டிருந்தவன், அவளின் அருகாமையில் தன்னையே மறந்திருந்தான்!
“pbs!”
மனோஜின் உதடுகள் சூடாக அவளின் கன்னத்தில் பதியவும், ‘என்ன நான் பேசிக் கொண்டிருக்கும் போது’ என ஒரே ஒரு வினாடி சுணங்கிய மஞ்சு உடனே அவனின் மனதை புரிந்துக் கொண்டவளாக சுணக்கத்தை தூக்கி எரிந்து அவனை காதலுடன் அணைத்துக் கொண்டாள்.
மஞ்சுவின் சம்மதம் மனோஜின் காதல் உணர்வுகளை பல மடங்கு கிளர்ந்தெழ செய்தது.
எதிர் வர இருக்கும் பிரிவுக்கும் சேர்த்து ஈடுக் கட்டுபவனைப் போல அவள் மீது காதல் மழை பொழிந்தான்... இரவு முழுவதும் அவளுக்கே அவளுக்கான ஸ்பெஷல் காதல் காவியங்கள் தீட்டினான்!
அவனின் காதல் பேரலையில் மஞ்சு மொத்தமாக மயங்கி தான் போனாள்!
“கால் மணி நேரம் இருக்கு... லைன்ல நின்னு லக்கேஜ் செக்-இன் செய்துட்டு போக சரியா இருக்கும்...” என்ற மஞ்சுவின் குரலில் வருத்தம் இழையோடியது.
மனோஜையும், மஞ்சுவையும் மாறி மாறி பார்த்த நிர்மல்,
“இன்னும் 15 மினிட்ஸ் இருக்கே. நான் ஒரு போன் செய்யனும், செய்துட்டு வந்துடுறேன்...” என்று சொல்லி அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு விலகி சென்றான்.
“இதெல்லாம் சரியா தான் செய்றான்! ஆனால் மூணு நாளா தொல்லையும் செய்றான்... தெரிஞ்சு செய்றானா, தெரியாம செய்றானா???” என நிர்மல் சென்ற பக்கத்தை பார்த்துக் கொண்டே பேசினான் மனோஜ்...!
“இதென்ன கேள்வி மனோஜ்? வேணும்னு தான் செய்றான்! நீங்க ஆபீஸ்ல அவனை திட்டுனீங்கள்ள, அதுக்காக ப்ளான் செய்து பழி வாங்குறான்...”
“வாங்குவான், வாங்குவான்!!! அவனுக்கு இருக்கு... நீ அந்தப் பக்கம் கிளம்பினதும் அவனை கவனிச்சுக்குறேன்...”