ப்ளைட்டில் ஒலித்த அனவுன்ஸ்மென்ட் ப்ளைட்டில் இருந்த பலரையும் உற்சாகப் படுத்துவதை மஞ்சுவால் பார்க்க முடிந்தது!
அவளுக்கு எந்த உற்சாகமும் தோன்றவில்லை! அவள் மனம் இப்போதும் சிகாகோவில் மனோஜிடமே இருந்தது!
இங்கிருந்து அப்படியே திரும்பி சிகாகோ செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அவள் மகிழ்ச்சியுடன் கிளம்பி விடுவாள்! ஆனால் அதற்கு இப்போதைக்கு வழி இல்லை!
விமானம் தரை இறங்கியப் பிறகும் அவசரப் படாமல் பொறுமையாக தன் பேகை எடுத்துக் கொண்டு இறங்கினாள் மஞ்சு.
தன் பெட்டிகளை கண்டுப்பிடித்து எடுத்தப் போது, சில மாதங்களுக்கு முன் மனோஜ் வருகைக்காக இதே எர்போர்ட்டின் வாயிலில் தவமாய் தவமிருந்தது நினைவில் வந்தது!
மனோஜ், மனோஜ் மனோஜ்!
அவள் உலகமே அவனை சுற்றி சுழல்வதாக தோன்றியது...!
அந்த சிந்தனையுடன் வந்தவள்,
“மஞ்சு...!” என்று சத்தமாக ஒலித்த தங்கை சாதனாவின் குரல் கேட்ட உடன் கூட்டத்தில் தங்கையை தேடினாள்!
“இங்கே இருக்கோம்...” என்ற குரல் வந்த திசையை தொடர்ந்தவள், கை அசைத்துக் கொண்டிருந்த தங்கை மட்டுமல்லாமல், அம்மா, அப்பா, அத்தை, ஜோதி, ஷண்முகம் என அனைவரையும் கண்டாள்!
அது வரை சோர்ந்திருந்த அவளின் மனம் உறவுகளை கண்ட உடன் மலர்ந்தது. பதிலுக்கு மகிழ்ச்சியுடன் கை அசைத்தாள்.
பெட்டிகளுடன் அவள் வெளியே வந்த உடன் அனைவரும் அவளை சூழ்ந்துக் கொண்டார்கள்!
கலர் ஆயிட்ட, இளைச்சு போயிட்ட எக்ஸட்ரா எக்ஸட்ரா செல்லம் கொஞ்சல்ஸ்க்கு பிறகு,
“அத்தை, நான் எங்க வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு அங்க வரட்டுமா??” என்று தயக்கத்துடன் நிர்மலாவிடம் கேட்டாள் மஞ்சு.
“சரி மஞ்சு! இதை கேட்க எதுக்கு இவ்வளவு தயக்கம்?” என்று நிர்மலா உடனே பச்சைக் கொடி காட்டி விடவும், மஞ்சுவின் மனம் இன்னும் கொஞ்சம் குஷியானது!
“சது வேலை எல்லாம் எப்படிடி இருக்கு?” என்று தங்கையிடம் விசாரித்தவள்!
அதற்கு சாதனா பதில் சொன்னப் பிறகு, ஜோதியிடமும் விசாரித்தாள்!
“ஜோதி, எப்படி இருக்க? புது வேலை பிடிச்சிருக்கா? கார்த்திக் எப்படி இருக்கான்?”
“எல்லாம் நல்லா இருக்கு சின்ன அண்ணி. அவரும் நல்லா இருக்கார்...” என அமைதியாக