(Reading time: 7 - 13 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

பதில் சொன்னாள் ஜோதி.

அடுத்து ஷண்முகம் பக்கம் கவனத்தை திருப்பினாள் மஞ்சு!

“எப்படி இருக்கீங்க? என்ன வினோ வரலை? அவங்களும் பையனும் வருவாங்கன்னு ஆர்வத்தோட இருந்தேன் தெரியுமா? இப்படி ஏமாத்திட்டீங்க...”

“சின்ன குழந்தைல மஞ்சு. அதான்...” என்ற ஷண்முகத்தின் குரலிலும் உற்சாகம் இல்லை. அவனின் முகத்திலும் பழைய மலர்ச்சி இல்லை!

“மஞ்சுக்கு பசிக்கும், வாங்க ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிகிட்டு கிளம்புவோம்,” என்று நிர்மலா சொல்ல, எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டு நடந்தார்கள்!

சாதனாவும், ஜோதியும் மஞ்சுவின் இரு பக்கமாக நடந்தார்கள்.

“நீ இல்லாம சென்னையே டல் அடிச்சுது அக்கா. நீ வந்தப்புறம் தான் பிரகாசமா இருக்கு!”

“ஆமாம் நான் வரும் போது எலக்ட்ரிசிட்டியும் தூக்கிட்டு வந்தேன். அதான் அப்படியே பளிச்சுன்னு ஆயிடுச்சு!”

“உன் கிட்ட போய் ஒரு பேச்சுக்கு புகழ்ந்தேன் பாரு, என்னை சொல்லனும். தப்பு தப்பு தப்பு!”

“இதையாவது சரியா சொன்னீயே, சந்தோஷம்!!!” என்று தங்கையிடம் கதை அளந்த மஞ்சு, ஜோதி அமைதியாக இருப்பதை கவனித்து,

“வேதாந்த் எப்படி இருக்கான் ஜோதி? உன் கிட்ட நல்லா வருவானா? ஆல்மோஸ்ட் ஒரு வயசாகப் போகுதே, எல்லோரையும் அடையாளம் தெரியும்ல??” என்று வினோதினியின் மகன் பற்றி விசாரித்தாள்.

“வருவான் அண்ணி,” என்ற ஜோதி, தயக்கத்துடன் அண்ணன் இருந்த திசையை பார்த்து விட்டு,

“பெரிய அண்ணனுக்கும் அண்ணிக்கும் நடுவே எல்லாம் சரியா இல்லை சின்ன அண்ணி. அவங்க இரண்டு பேரும் பேசிக்குறதே இல்லை. ரொம்ப நாளாவே அப்படி தான். அம்மாக்கும் இதனால ரொம்ப மன வருத்தம். அவங்க சொன்னா அண்ணி அம்மா மேலேயும் கோபப் படுறாங்க,” என்றாள் மெல்லியக் குரலில்.

மஞ்சுவால் அவள் சொன்னதை நம்பவே முடியவில்லை. வினோதினி ஷண்முகத்திடம் கோபித்து பேசாமல் இருக்கிறாளா???

ஷண்முகமும் சரி, வினோதினியும் சரி அப்படி கோபத்தை வளர்த்துக் கொள்பவர்கள் இல்லையே? அதுவும் பேசாமல் இருக்கிறார்களா???

மனதுள் நிரம்பி வழிந்த கேள்விகளை மஞ்சு வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

மனோஜ் குடும்பத்தில் மற்ற அனைவரையும் விட அவளுக்கு நெருக்கமானவள் வினோதினி தான்! வினோதினியிடம் நேராக பேசாமல் எந்த மாதிரியான முடிவிற்கும் வர அவள் தயாராக இல்லை!

7 comments

  • enada athisayam idhu, sad and shocking to read this :eek: :eek: amaidhi-in sigarangal...😜 ivanga rendu perukkula misunderstanding create pana than eppadi manasu vandhuchi bindu ma'am facepalm anyway thudhu pura manju vandhutanga ini no tension 😍😍😍 hope she gives a quick fix 😉 nirmal and manjo convo was cute 👌👌 interesting update ma'am 👏👏👏👏👏👏👏 look forward to see what happens next.<br />Thank you.
  • :clap: nice epi mam.but :Q: vino,shanmugam naduvil appadi enna pinakku irukkum :sad: eagerly waiting 4 next epi :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.