ஜோதியும், மஞ்சுவும் ரியாக்ட் செய்யும் முன்பே கிட்டத்தட்ட தொப்பலாக நனைந்துப் போயிருந்தார்கள்...
“ஐயையோ, சளி பிடிச்சிடும்... வாங்க அண்ணி கீழப் போகலாம்...” என்று ஜோதி ஓடாத குறையாக படிகள் பக்கம் போக, மஞ்சு எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாக நடந்து வந்தாள்...
அவளுக்கு சினிமா ஹீரோயின் போல மழையில் நனைவதன் மேல் தனிப் பிரியம் எல்லாம் இல்லை... ஆனால் திருமணத்திற்கு பின் மழை மீது தனி பாசம் ஏற்பட்டிருந்தது...
எல்லாம் மனோஜின் மழைக் கனவினால் வந்த பாசம் தான்...
“நீ போ ஜோதி... நான் வரேன்...” என்றவள், மழைத்துளிகள் தன் மேலே பட்டு ஏற்படுத்தும் ஜில்லிப்பை உணர்ந்து அனுபவித்து ரசித்தாள்...
வினோதினி, ஷண்முகம், அவர்களின் டிஷூம் டிஷூம் எல்லாம் அந்தக் கணத்தில் மஞ்சுவிற்கு மறந்துப் போனது...
அவளுடைய மனம் இறக்கைக் கட்டிக் கொண்டு பல ஆயிரம் மைல்கள் அப்பால் இருந்த மனோஜிடம் சென்று நின்றது...
பொறுமையாக கீழிறங்கி வந்தவள், துவாலையை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாமல், அங்கிருந்த கணினியை உயிர்ப்பித்து, “I miss you Manoj” என்ற ஒரு வரி ஈமெயில் அனுப்பி வைத்தாள்.
மனோஜிற்கு இது ஆபீஸ் நேரம் என்பது தெரிந்திருந்தாலும், அவனிடம் இருந்து அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் போனை கைக்கெட்டும் தூரத்தில் மேஜை மீது வைத்து விட்டு, உடை மாற்றினாள். தலை துவட்ட டவலை அவள் கையில் எடுத்த நேரம், அவள் எதிர்பார்த்துப் போலவே மனோஜிடம் இருந்து அழைப்பு வந்தது...
எடுத்து காதில் வைத்த உடனே,
“மனோஜ்...” என்றாள் கொஞ்சலாக!
“PBS!” என்றான் மனோஜும் கிட்டத்தட்ட அவளைப் போலவே...
“பரவாயில்லையே, உங்களுக்கு கூட கொஞ்ச தெரியுது...”
“இதை நீ அங்கே இருக்கும் போது சொல்லக் கூடாது pbs...”
“அச்சச்சோ...”
“என்ன திடீர்னு ஈமெயில் எல்லாம் அனுப்புற??”
“சென்னைல மழை பெய்யுது மனோஜ்...”
“அதனால???”