(Reading time: 5 - 10 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

  

“வாழ்க்கையில் எப்போதுமே திமிராகவே இருக்கக் கூடாது!...ஏன்னா...நாளைக்கு நாம திரும்பிப் பார்க்கும் போது...நமக்காக யாருமே இருக்க மாட்டாங்க...நம்ம திமிர் மட்டும்தான் நம்ம கிட்ட இருக்கும்!... எப்பவுமே... “தன்னை உயர்த்திப் பிடிப்பவன் தாழ்ந்துதான் போவான்!...தன் சுற்றத்தை உயர்த்திப் பிடிப்பவன்தான் உயர்ந்து போவான்!..” என்ற இன்ஸ்பெக்டர், “இனி எனக்கு இங்கு வேலையில்லை...உன்னை உன் சுற்றத்தார் பார்த்துக்குவாங்க” சொல்லி விட்டு மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினார் இன்ஸ்பெக்டர்.

  

“ஜூஸ் போதுமா?...வேற ஏதாவது வேணுமாப்பா?” ராமலிங்க பூபதி வந்து கேட்க,

  

சில நிமிடங்கள் அமைதியாய்த் தலை குனிந்திருந்த சொக்கு, மெல்லத் தலை நிமிரும் போது, அவன் கண்களில் ஈரம். “ஒண்ணே ஒண்ணு வேணும் மாமா”என்றான்.

  

“சொல்லுப்பா” என்றார் ராமலிங்க பூபதி அவசரமாய்.

  

“மல்லிகா வாயால் என்னை “மன்னிச்சிட்டேன்”னு சொல்லணும்...அதை நான் கேட்கணும்”என்றான்.

  

அதைக் கேட்டு பூரித்துப் போன ராமலிங்க பூபதி, “ஒரு தடவை என்ன?...நூறு தடவை சொல்லச் சொல்றேன்...போதுமா?”என்றார் பலமாய்ச் சிரித்து.

   

தொடரும்

Go to Kai kortha priyangal story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.