(Reading time: 7 - 14 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

  

கோயமுத்தூர்.

  

கே.பி.எஸ்.டிரான்ஸ்போர்ட் முதலாளி சிங்கமுத்துவை அவர் மனைவி ஜெகதாம்பாள் உசுப்பினாள். “என்னங்க....கொஞ்சம் வாசலுக்கு வந்து பாருங்க...நம்ம வீட்டுக்கு முன்னாடி போலீஸும்...ஜனங்க கூட்டமும் நிக்குதுங்க”

  

அவசரமாய் எழுந்தவர், “போலீஸா?...எதுக்கு?”

  

கேட்டவாறே எழுந்து வாசலுக்கு வந்தவர் கேட்டுக்கு வெளியே அந்த கும்பல் நிற்பதையும் அந்த கூட்டத்தின் முன் பகுதியில் ஒரு இன்ஸ்பெக்டரும், ஒரு கான்ஸ்டபிளும் நிற்பதைப் பார்த்து, அவசர அவசரமாய் சாவியை எடுத்து வந்து கேட்டை நீக்கி விட்டார்.

  

அந்தக் கூட்டம் “திமு...திமு”வென்று உள்ளே வர, அதில் ஒருவன், “யோவ்...டிரான்ஸ்போர்ட் பிசினஸ் நடத்தறியா?...இல்லை பொம்பளைகளைக் கடத்தி விற்கிற பிசினஸ் நடத்தறியா?”ஆவேசமாய்க் கேட்க,

  

அவனை அதட்டினார் இன்ஸ்[பெக்டர். “ச்சூ...அதான் நான் விசாரிப்பேன் அல்ல?...அதுக்குள்ளார எதுக்கு நீ பேசறே?”

  

அந்தக் காவல்துறை ஆட்களை போர்ட்டிகோவிலிருந்த சோபாவில் அமர வைத்து விட்டு, தானும் அமர்ந்த சிங்கமுத்து நிதானமாய்க் கேட்டார், என்ன இன்ஸ்பெக்டர்?...என்ன பிரச்சினை?”

  

“உங்க டிரான்ஸ்போர்ட்ல டிரைவரா வேலை பார்க்கிற தங்கவேலு என்பவர் இவரோட பொண்ணைக் கட்த்திட்டுப் போயிட்டார்!ன்னு இவங்க புகார் குடுத்திருக்காங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

  

கீழுதட்டைத் தேய்த்த சிங்கமுத்து, “இல்லையே...தங்கவேலு அப்படிப்பட்ட ஆள் இல்லையே?...எங்கியோ...ஏதோ தப்பு நடந்திருக்கு” என்று சன்னக் குரலில் சொன்ன சிங்கமுத்து,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.