மஞ்சுவும் ஜோதியும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், மனோஜ் அவர்களின் பெட்டிகளை எடுத்து வந்து வைத்துக் கொண்டிருந்தான். நிர்மலாவும் அவனுடன் சென்றாள்...
அவர்கள் இருவரும் பக்கத்தில் இல்லாதப் போது ஜோதி மஞ்சுவின் பக்கத்தில் வந்து ரகசியக் குரலில் பேசினாள்.
“அம்மா பத்தி எல்லாம் கவலைப் படாதீங்க அண்ணி... நான் பார்த்துக்குறேன்... எங்க அப்பாக்கு அப்புறம் எங்களை எல்லாம் வளர்க்க அவங்க தனியா ரொம்ப சிரமப் பட்டாங்க... அதான் படிப்பு, வேலைக்கு எல்லாம் எக்ஸ்ட்ராவா மரியாதைக் கொடுப்பாங்க... அவங்க கோபம், வருத்தம் எல்லாம் இரண்டு மூணு நாள் தான்... அதுக்குள்ளே சரியா போயிடும்... நீங்களும், அண்ணனும் யோசிக்காமலா முடிவெடுத்திருப்பீங்க??? அம்மா கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்... இனிமேலும் நான் உங்களுக்கு சப்போர்ட்க்கு இருக்கேன்...”
ஜோதி சொன்னது மஞ்சுவிற்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது என்றால், அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அதை விட இரண்டு மடங்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது!
மஞ்சு கடந்த முறை இந்தியா வந்தப் போதே, ஜோதியிடம் மாற்றம் ஏற்பட்டு இருந்தது... ஆனால் இந்த அளவிற்கு மஞ்சுவிற்காக யோசித்துப் பேசும் அளவிற்கான மாற்றம்??? மஞ்சு இதை எதிர்பார்த்திருக்கவே இல்லை...
இதற்கு எல்லாம் காரணம் அன்று கார்த்திக் அவளை இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தி ஜோதியை திருமணம் செய்துக் கொள்வதுப் பற்றிக் கேட்டப் போது, மனதில் இருந்த கோபத்தைக் காட்டாமல் நிதானம் கடைப்பிடித்தது தான்...
இது மஞ்சுவிற்கு தெளிவாகப் புரிந்தது...
எல்லா உறவுகளிலுமே கிவ் அண்ட் டேக் இருக்க தான் செய்கிறது...
குடும்பத்திற்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பது எப்போதும்