(Reading time: 8 - 15 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

அவன் தான் சம்பாதிக்கலை, உன் சம்பளத்தையும் நீ அவனுக்குன்னே செலவு செய்ற. இப்படி இருந்தா அப்பாவோட ஒரே ஒரு சம்பளத்துல குடும்பத்தையும் நடத்தி, நாம எப்படி உன் கல்யாணத்தையும் யோசிக்குறது? இது வரைக்கும் வந்த வரன் எல்லாமே அம்பது அறுபது பவுன் நகை, கையில லட்சக்கணக்கான பணம்ன்னு கேட்குறாங்க, நாம என்ன செய்ய முடியும்? உனக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு வச்சுட்டு அவனை எங்கே வேணா போக சொல்லு, நாங்க கேட்கலை!”

  

ஆதித்யாவின் முகம் வாடிப் போனதை  பார்த்த சான்வி அவனுக்காக வருந்தினாள்.

  

“அம்மா, ப்ளீஸ் தம்பி மனசு வருத்தப் படுற மாதிரி அப்படி எல்லாம் சொல்லாதீங்க. அவன் ஆசைப் படுறது நடந்தா அவன் உங்க விருப்பம் போல லட்சக்கணக்கில சம்பாதிப்பான் அம்மா. அவனுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. இப்போ எல்லாம் முப்பத்தி அஞ்சு வயசுக்கு மேல கூட கல்யாணம் செய்துக்குறாங்க. எனக்கு எந்த அவசரமும் கிடையாது. நான் ஆதித்யா வாழ்க்கையில ஜெயிக்குறதைப் பார்த்துட்டே கல்யாணம் செய்துக்குறேன்!”

  

“அவ்வளவு வருஷம் நாங்க இருக்கனுமே சான்வி! எனக்கு ஏதாவது ஒன்னு ஆனா உங்கம்மா நிலைமை என்ன, உன் நிலைமை என்னன்னு யோசிச்சு எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது!” என வருந்தினார் ஷிவான்க்.

  

“அப்பா, இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க. நீங்க நூறு வருஷத்துக்கும் அதிகமா வாழ தான் போறீங்க! ஆதி ஜெயிக்குறதைப் பார்த்து சந்தோஷப் பட தான் போறீங்க.”

  

“என்னவோ போ, சான்வி!”

  

“ஆதி, நீ உனக்கு டிராவல்க்கு என்னென்ன வேணும்னு லிஸ்ட் போட்டு என் கிட்ட கொடு. நான் எல்லாம் வாங்கித் தரேன்,” என ஆதித்யாவிடம் சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றாள் சான்வி.

  

அவள் போனதும் ஷிவான்க் மகனை அழைத்தார்.

  

“ஆதி, உன் அக்கா உன் மேல எந்த அளவுக்கு பாசம் வச்சிருக்கான்னு நான் சொல்லி உனக்கு

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.