(Reading time: 12 - 23 minutes)
Inspector Then
Inspector Then

தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 10 - தேன்மொழி

   

கேஸ் ஃபைல் - 02 - குற்றம் புரிந்தவர்... !

  

வாய் விட்டு சத்தமாக சிரித்துக் கொண்டிருந்த வினோதனை நண்பனை எரிச்சலுடன் பார்த்தான் தேன்.

  

"போதும்டா, வாய் சுளுக்கிக்க போகுது."

  

"உனக்கெல்லாம் சிஸ்டர் தாண்டா சரி! டிஎஸ்பி சொல்லி கூட கேட்காதவன், எப்படி பத்து நிமிஷத்துல மனசு மாறிட்ட!!! வாய்ப்பே இல்லைடா!"

  

"போதும் நிறுத்து! அந்த கேஸ் ஃபைலைக் கொடு"

  

"இந்தா உன் ஃபைல்! உன் சக்சஸ்க்கான காரணம் இன்னைக்கு சாயந்திரம் தான் எனக்கு தெரிஞ்சது! அந்த ரவுடிகளையே சிஸ்டர் என்ன மிரட்டு மிரட்டுனாங்க தெரியுமா!"

  

"அதைப் பத்தி பேச வேண்டாம்! நீ போய் படுத்து தூங்கு..."

  

வினோதனை தூங்க அனுப்பி விட்டு, அவன் தந்த ஃபைலுடன் தன் மேஜைக்கு சென்றான் தேன். மேஜை விளக்கை எரிய விட்டு, நாற்காலியில் அமர்ந்து ஃபைலில் இருந்ததை மும்முரமாக படிக்கத் துவங்கினான்.

  

அந்த கேஸின் சாராம்சம் இது தான்:  

   

212 ஏப்ரல் மாதம் நான்காம் தேதி காலேஜ் ஸ்டடி லீவில் தன் தோழிகள் ஆறு பேருடன் மதியூரில் இருக்கும் தன் பங்களாவிற்கு வந்தாள் அமிர்தா.

  

அமிர்தா அந்த பங்களாவின் உரிமையாளர் ராஜசுலோச்சனாவின் ஒரே மகள். சிறுவயதிலேயே தந்தையை இழந்திருந்த அமிர்தாவிற்கு தாய் தந்தை எல்லாம் ராஜசுலோச்சனா தான்.

  

அமிர்தாவுடன் வந்த அவளின் தோழிகளில் ரோஹினியும் ஒருத்தி.

  

நல்ல கலகலப்பான பெண் என்று மற்றவர்களால் விவரிக்கப்படும் ரோஹினி, அதே ஏப்ரல்

One comment

  • :clap: ella kesum ippadi niyayamaga nadanthal magizhchiyaaga irukkum.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.