வந்திருக்கு...”
“ஓகே! ஆனாலும் இந்த கேஸ் ஃபைல் என்ன இப்படி கேவலமா இருக்கு? அங்காங்கே தொடர்பே இல்லாமல் இருக்கு... ஏதோ தப்பா நடந்த மாதிரி இருக்கு?”
“சந்தேகமே வேண்டாம் தேன், நம்ம டிபார்ட்மென்ட் சைட்லேயும் கோல்மால் நடந்திருக்கு...”
வினோதன் பேசிக் கொண்டிருந்த போது அவனின் லேப்டாப்பில் விடியோ கால் வருவதற்கான அறிகுறியாக சத்தம் கேட்டது.
“ரோஹினியோட அப்பா சந்திரசேகர் லைன்ல, வரார், நான் ஸ்பீக்கர் போடுறேன்.”
தேனிடம் சொல்லியபடி ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு விடீயோ கால் இணைப்பை ஏற்றான் வினோதன்.
மறு பக்க விடியோவில் தெரிந்த சந்திரசேகர், தாடி மீசை, மற்றும் சரியாக வாராத தலை முடியுடன் இருந்தார்.
“வணக்கம் மிஸ்டர் சந்திரசேகர். நான் க்ரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டர் வினோதன். இவர் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன்.”
“சார் உங்க கால்ல விழுந்து கேட்குறேன் எப்படியாவது என் பொண்ணை கொலை செய்தது யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க சார். எங்களுக்கு இருந்தது அவ ஒருத்தி மட்டும் தான்.”
சந்திரசேகரின் முகம் கண்ணீருடன் பளபளத்தது.
“எங்களால முடிந்த அளவில் எல்லாத்தையும் செய்வோம் சார். சீக்கிரமே என்ன நடந்ததுன்னு கண்டுபிடிச்சு, கொலையா இருந்தா கல்ப்ரிட்டை பிடிச்சு உள்ளே போடுவோம் எங்களை நம்புங்க.”
“கொலையா இருந்தான்னு சந்தேகமே வேண்டாம் சார். இது கொலை தான்! மத்த நாலு