“காந்திபுரம் வந்தாச்சு. இனி வீடு கண்டுபிடிக்க வேண்டியது தான் பாக்கி”
அந்த வீடை கண்டுபிடிக்க அவர்களுக்கு வெகு நேரம் ஆகவில்லை. சற்றே சாயம் போக தொடங்கி இருந்த அந்த மஞ்சள் நிற வீட்டின் முன் ஜீப்பை நிறுத்தி விட்டு இறங்கினார்கள் வினோதனும், தேன்-னும்.
வீட்டின் கதவை திறந்தவருக்கு ஐம்பது வயதிருக்கும்.
“இது விக்னேஸ்வரன் வீடா?”
அவர்களை சந்தேகமாக பார்த்தபடி,
“ஆமாம், நீங்க யாரு?” என்றார் அவர்.
“நாங்க க்ரைம் பிரான்ச் போலீஸ்.”
இருவரும் தங்களின் அடையாள அட்டையை எடுத்து காட்டினார்கள்.
“வாங்க சார் உள்ளே வாங்க1 இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே எங்களை தொல்லை செய்ய போறீங்க?’
உள்ளே ஓரமாக ஒரு இளைஞனும், இன்னொரு பக்கம் ஒரு இளைஞியும், அவளருகே அவளின் அம்மா வயதான ஒருவரும் நின்றிருந்தார்கள்.
“இவர் தான் விக்னேஸ்வரனா?”
“ஆமாம் சார் நான் தான் விக்னேஷ்”
“உங்க கூட கொஞ்சம் பேசனும்”