இன்ஸ்பெக்டர் சொன்னது போல இது தற்கொலை இல்லை.”
“எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க?”
“என் மக இறந்துட்டான்னு தெரிஞ்சு அலறி அடிச்சுட்டு நானும் என் மனைவியும் மதியூர்ல இருக்க செவ்வந்திபுரம் போனோம். நான் அவளை ஹாஸ்பிட்டல்ல பார்த்தப்போ போஸ்ட்மார்ட்டம் முடியலை, கெஞ்சி கூத்தாடி அவ முகத்தை ஒரு தடவை பார்க்க பர்மிஷன் வாங்கிட்டு போய் நானும் என் மனைவியும் போய் பார்த்தோம். அவள் தலைல மட்டுமில்லாமல் முதுகுலேயும் வெட்டு காயம் இருந்தது. ஆனால் அதை பத்தி எந்த போலீஸ் ரிப்போர்ட்டிலும் சொல்லலை, ஏன் அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல கூட அதை பத்தி சொல்லலை”
“ஓ! உங்களுக்கு உறுதியா தெரியுமா சார்?”
“நான் ஃபோரன்சிக் நிபுணன் இல்லை இன்ஸ்பெக்டர், ஆனாலும் ஒரு டாக்டர். என் கண்ணுல பட்டது தப்பாக வாய்ப்பே இல்லை. இன்பாக்ட் அப்போ அங்கே ஹாஸ்பிட்டல்ல இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் கூட அதை பத்தி சொன்னார், ஆனால் அதுக்கு அப்புறமா அதை பத்தி எதுவுமே சொல்லாம மறைக்குறாங்க.”
“ஒருவேளை கிணத்துல விழுந்த போது ஏற்பட்ட காயமா கூட இருந்திருக்கலாமே சார்?”
“அப்படினா அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? அது மட்டுமில்லை சார் என் மனைவி இப்போ சித்த சுவாதீனம் இல்லாமல் இருக்கா.”
“தெரியும், கேள்வி பட்டேன், சாரி சார்”
“அவளுக்கு அந்த நிலைமை எப்படி வந்துச்சு தெரியுமா சார்? போலீஸ் முதல் விசாரணையில் என் பொண்ணு காதல் தோல்வியால தற்கொலை செய்துக்கிட்டான்னு கேஸை மூடினப்போ, மேல் முறையீடு மனு கொடுத்தேன், அப்போ சில ரவுடிங்க வந்து எங்களை மிரட்டினாங்க. நாங்க மனுவை வாபஸ் வாங்காவிட்டால் எங்களை கொலை செய்திருவேன்னு மிரட்டினாங்க. எங்களோட ஒரே பொண்ணு போனப்புறம் நாங்க இருந்து என்ன செய்ய போறோம்