மாதம் பதினைந்தாம் தேதி அந்த பங்களாவில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டாள்!
ஃபைலில் இருந்த எல்லா பக்கங்களையும் புரட்டி விட்டு எழுந்து இங்கும் அங்கும் நடந்தான் தென்றல்வாணன். அவனின் மனம் ஃபைலில் வாசித்த பக்கங்களை பற்றி யோசிக்க தொடங்கி இருந்தது!
********************
மூடி இருந்த கதவை மெல்ல தட்டி,
“வினோதன்,” என்று கூப்பிட்டபடி கதவை திறந்த தேன், வினோதன் காதில் ஹெட்செட்டுடன் இருப்பதை கவனித்து நண்பனை கேள்வியுடன் பார்த்தான்.
“தேன், வா வா,” என்று அவனை உள்ளே அழைத்தான் வினோதன்.
வினோதனின் முன் இருந்த லேப்டாப்பை கவனித்த தேன்,
“வீடியோ காலா? யார் கூட வினோதன்??? என்று கேட்க,
“அந்த பொண்ணு ரோஹினியோட அப்பா, பேசனும்னு சொன்னார்” என்று விளக்கமளித்தான் வினோதன்.
“ஓ!”
“நீ சொல்லு, ஃபைல் பார்த்தீயா? உனக்கு என்ன தோணுது?”
“ரொம்ப கேவலமா இருக்கு... நாலு தடவை கோர்ட் போலீஸ் ரிப்போர்ட்டை நிராகரிச்சு ஒழுங்கா இன்வெஸ்டிகேட் செய்ய சொல்லி அறிவுறுத்தி இருக்கு...”
“ஆமாம், நாலு தடவையும் நாலு வேறு வேற இன்ஸ்பெக்டர்ஸ் கேஸ் ரிப்போர்ட்