கெடுக்குறாங்க.”
சந்திரசேகரின் கண்களில் இருந்து இப்போது கண்ணீர் கொட்டியது.
“சார், கூல் டவுன்! உங்களுக்கு ஒரு விஷயத்துல நான் உறுதி தரேன். இந்த கேஸை விசாரிச்சு நாங்க கொடுக்க போகும் ரிப்போர்ட் அங்கே என்ன நடந்ததோ அதை முழுசா சொல்லும். கொலையா இருந்தாலும் சரி, தற்கொலையா இருந்தாலும் சரி! எங்களை நீங்க நம்பலாம்.”
“நம்புறேன் சார். நான் வேறென்ன செய்ய முடியும்”
“உங்க பொண்ணு உங்க கிட்ட கடைசியா பேசினப்போது வேற ஏதாவது புதுசா, இல்லை வித்தியாசமா ஏதாவது சொன்னாங்களா?”
“இல்லை சார். அவ படிச்சுட்டு இருக்க சப்ஜக்ட் பதியும், ப்ராஜக்ட் பத்தியும் தான் பேசினாள்.”
“ஓகே, வேற ஏதாவது உங்களுக்கு அப்புறமா ஸ்ட்ரைக் ஆனால் எவ்வளவு சின்ன விஷயமா இருந்தாலும் பரவாயில்லை, என்னை என் செல் நம்பர்ல காண்டாக்ட் செய்து சொல்லுங்க.”
“சொல்றேன் சார்.”
அழைப்பை துண்டித்து விட்டு, தேன்-னின் பக்கம் பார்த்தான் வினோதன்.
“முதல்ல திரும்ப ஒரு போஸ்ட்மார்ட்டம் செய்யனும் வினோதன். பாடி அவைலபிலா இல்லை க்ரீமேஷன் செய்துட்டாங்களா?”
“அவைலபிள் தான், முழு விசாரணை முடிஞ்ச பிறகு தான் அடக்கம் செய்வேன்னு அவ அப்பா காத்துட்டு இருக்கார்.”
“ஓகே குட்... ஃபைல்ல இருக்க போட்டோஸ்ல சந்திரசேகர் சொன்ன காயம் இருக்குற போட்டோஸ் எதுவும் இல்லை...”