(Reading time: 8 - 15 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

அமைதியாக, பொறுமையாக பேசத் தொடங்கினான் மனோஜ்.

  

அவன் இவ்வளவு வருடங்களில் செய்த ‘அரிய பெரிய’ சேவைகளை சொல்லி, மனோஜ் வேறு கம்பெனிக்கு போக வேண்டாம்... தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக வாக்களித்தார் அவர்...!

  

மனோஜிற்கு அவர் மீது எப்போதுமே மரியாதை உண்டு! அவருக்கு கீழே அவன் வேலை பார்த்த நாட்களில் அவனுக்கு தொல்லைகள் எதுவுமில்லை! சுதந்திரமும் இருந்தது, செய்யும் வேலைக்கு ஏற்ப வேலையில் உயர்வும் ஏற்பட்டது!!!

  

அதை மனதில் வைத்து பொறுமையாகவே அவரிடம் பேசினான் மனோஜ்... ஸ்ரீனிக்கு கீழ் வேலை செய்யத் தொடங்கிய நாட்களில் இருந்து நடந்தவற்றை சொன்னவன், இறுதியாக,

  

“இதுக்கும் மேல நான் இங்கேயே இருந்தா சரியா இருக்காது... ஐ ஆம் சாரி...” என்று முடித்தான்.

  

மேலும் சில நிமிடங்கள் தொடர்ந்து அவரிடம் பேசி, புது வேலை பற்றிய தகவல்களையும் சொல்லி, அவருடன் தொடர்பில் இருப்பதாக சொல்லி முடித்து போனை கீழே வைத்தப் போது அவனுக்கு ரொம்பவும் சோர்வாக இருந்தது!

  

ஆனாலும் அவனின் கால்கள் தானாக மஞ்சுவை தேடி சென்றது...

  

நேரம் பத்து மணியை தாண்டி இருந்தாலும் மஞ்சு தூங்கவில்லை. பெட்ரூமில் இருந்த ஜன்னல் வழியாக இருண்ட வானத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

  

அவளை நோக்கி அவன் செல்ல முயன்ற போது, மீண்டும் அவனின் போன் இசைத்து அவனை அழைத்தது!!!

  

எரிச்சலுடன் மீண்டும் போன் இருந்த இடத்திற்கு சென்றான்.

  

இப்போது அழைப்பது ஆப்ஷோர் டீம் என்பது புரியவும், மனம் இல்லாமலே எடுத்துப்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.