விட்டுட்டு, திலீப்பை போன் செய்து கூப்பிட்டது ரொம்ப வித்தியாசமா இருக்கே. ஏதாவது தப்பா நடந்திருக்கும்னு சஸ்பெக்ட் செய்தீங்களா என்ன?”
வினோதனின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் இருந்த சுலோச்சனா, திலீப் பக்கம் ஒருமுறை பார்த்து விட்டு, பேசினாள்.
“வயசு பொண்ணுங்களை வீட்டுல வைத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை இன்ஸ்பெக்டர். ரோஹினி வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போக மாட்டா. அப்படியே போனாலும் அமிர்தா கிட்டேயோ இல்லை அவ பிரெண்ட்ஸ் யார் கிட்டேயோ சொல்லாமல் போக மாட்டா. அன்னைக்கு யாருக்கும் எதுவும் தெரியலை எனும் போது எனக்கு கொஞ்சம் பயம் வந்திருச்சு. நம்ம வீட்டு பொண்ணு கூட இல்லை. அதான் உடனே திலீப்க்கு போன செய்தேன்.”
“ஒரு கேள்வி மேடம். உங்க வீட்டை காவல் காக்க நாய்கள் இருந்திச்சாமே, அப்படியா?”
“ஆமாம் இன்பெக்டர். இப்போவும் கூட இருக்கு. பத்து நாய்ங்க இருக்கு!”
“ரோஹினி இறந்த அன்னைக்கு அந்த நாய்ங்க எல்லாம் காவலுக்கு இருந்ததா?”
“இல்லை இன்ஸ்பெக்டர் கட்டிப் போட்டிருந்தது” என்றாள் சுலோச்சனா தயக்கத்துடன்.
“ஏன்?”
“அதுக்கு காரணம் நான் தான் இன்ஸ்பெக்டர். என் ஃபிரெண்ட்ஸ் எல்லோருக்கும் அதுங்களை பார்த்து பயம். சில சமயம் நைட் ரொம்ப நேரம் குறைச்சிட்டே இருக்கும்ங்க. எனக்கு அதெல்லாம் பழகி போனது. ஆனால் அவங்களுக்கு கொஞ்சம் அன்கம்பார்டபிலா இருந்தது. அதனால நான் தான் கட்டிப் போட சொன்னேன்!” என்று விளக்கமாக பதில் சொன்னாள் அமிர்தா.
அமிர்தாவை கூர்மையாக பார்த்த தேன், பின் சுலோச்சனாவை பார்த்தான்.
“வயசு பொண்ணுங்க வீட்டுல இருக்கிறது பயம்னு சொன்னீங்க, அப்புறம் எப்படி நாய்ங்களை