எப்போதுமே ஓமானாவுடன் வரும்போது, அவளுடைய ஜோக்குகளுக்கு சிரித்துக்கொண்டே தான் வருவாள் மானசா.
சத்தமாக சிரிக்காவிட்டாலும், மிதமான சிரிப்புடன் அவள் நடந்து வந்துக் கொண்டிருந்த போது, எதிரில் வந்த கார் ஒரு கிரீச் சத்தத்துடன் நின்றது. அதில் டிரைவர் சீட்டில் இருந்த ஆள் இறங்கி, மானசாவை ஏற இறங்க பார்த்துகொண்டே, ஓமானவை திட்டினான்.
"ஒரு பெண்ணில்லோ, இப்படியா சிரிக்கறது, ரோடை நோக்கி போகவேண்டா?" என்று அவளை ஏசினான்.
ஓமனா பதில் பேசுமுன், மானசா அவள் கையை பிடித்து வேண்டாம் என்று சைகை செய்தாள். அவளும் அதை ஏற்றுக்கொண்டு ஒன்றும் பேசாமல், "சாரி சாரே, ஞாங்கள் நோக்கல!"
அவனும் அவள் மன்னிப்பு கேட்டவுடன் ஒன்றும் பேசாமல், மான்ஸாவை விழுங்குவது போல பார்த்துவிட்டு தன் சீட்டில் உட்கார்ந்து காரை கிளப்பினான்.
மானசாவிற்கு உடம்பெல்லாம் உதறியது, அவன் பார்வை, அவள் தலையிலிருந்து கால் வரை ஓடியதை பார்த்த நொடியிலிருந்து, அவள் அவளாக இல்லை. அவளுக்கு தெரியாது அவன் அவளுடைய ஜாதகத்தையே விசாரித்து தெரிந்துக் கொண்டிருக்கிறான் என்று.
மானசா, கேரளா ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்தவள். அவர்கள், கொச்சியில் உள்ள அக்ரஹாரத்தில் தன் பெற்றோர் தம்பியுடன் வசித்து வந்தாள்.
காரில் வந்தவன், மாதவன் நாயர் ஒரு பெரிய தொழிலதிபர் வருடத்தில் முக்கால் வாசி நேரமும் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டிருப்பவன் . முப்பது வயதே ஆன மாதவன் தனக்கென்று ஒரு தீவை விலைக்கு வாங்கி வைத்து, அங்கே ஒரு பெரிய மாளிகையை கட்டிக் கொண்டிருந்தான்.
தீவு கொச்சிக்கும், எர்ணாகுளத்துக்கும் நடுவில் இருந்தது.