அவள் கன்னத்தை லேசாக தட்டிவிட்டு, ஓமானாவை முறைத்துவிட்டு, அவன் தன் காரில் ஏறிச் சென்றான்.
இரண்டு நாள் கழித்து தன் காலேஜிலிருந்து வீட்டுக்கு சென்றாள் மானசா. உள்ளே நுழைந்த போது மயான அமைதியாக இருந்தது. உள்ளே சென்று தன் அம்மாவை தேடி பிடித்தாள். வீடு என்னெவோ பெரிய வீடெல்லாம் இல்லை ஆனால் நுழைந்ததும் வராண்டா, அதற்குப் பின் ஒரு ஹால், அதன் பின் சமயலறை ஒட்டி ஒரு சாப்பாட்டு அறை, மாடியில் இரண்டு அறை இருந்தது. அவள் அம்மா, அவளை பார்த்த பார்வையில் அவள் செத்தே போனாள். "என்னம்மா, ஏன் என்ன ஆச்சு?"
"என்ன ஆச்சா? நீ காலேஜுக்கு போறியா? இல்லே லவ் பண்ண போறியா? அப்பா அவமானத்தில் மறிச்சு போயிண்டிருக்கார், அறியுமோ?"
"என்ன ஆச்சு அம்மே?"
"என்ன ஆச்சா, உங்க அப்பா அவமானத்தில் எப்படி உக்காந்திருக்கார் போய் நோக்கு"
"என்ன சொல்றே? ஒன்னும் புரியலை அம்மே?"
"யாரோ ஒருத்தன் உன்ன விவாஹம் செய்யணும்னு இங்கே வந்து உங்க அப்பாகிட்ட கேட்டுட்டு போறான், யாரடி அவன்? உனக்கு எத்தரை நாளாய் அவனோடு பழக்கம்?"
"அம்மே என்ன சொல்றாய்? யாரு வந்தா? எனக்கு யாரையும் தெரியாது"
"பொய் சொல்லாதே?"
"என்னம்மா சொல்றே? யார் வந்தா? நான் ஏன் பொய் சொல்லணும், ஒன் பொன்னப்பத்தி ஒனக்கு தெரியவேணாமா? நான் எப்ப பொய் சொல்லியிருக்கேன்?"
"அப்ப ஒனக்கு தெரியாம யார் அவன், தைரியமா உங்க அப்பாகிட்ட வந்து ஒன்ன விவாஹம்