"நான் தான், உன்ன எனக்கு பிடிக்கலேன்னு சொல்லிட்டேனே.."
"எல்லாம் பிடிக்கும், என்ன நல்லா பாரு, நான் என்ன அழகாயில்லையா?" அவன் நல்ல உயரம், அடர்த்தியான மீசை, அடர்த்தியான சுருள் முடி, நல்ல நிறம், உடற் பயிற்சி செய்து கொஞ்சம்கூட அதிக சதையில்லாமல் கட்டுக்கோப்பாக வளர்த்து வைத்திருந்தான் உடம்பை. நல்ல அழகனாகத்தான் இருந்தான்
"உங்ககிட்ட குணமில்லையே?" என்று கூறிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.
"அவளுக்கு ரூமை காட்டிவிட்டு, 'சாப்பாடெல்லாம் இங்கேயே வரும், நீ இறங்கி போகணும்னு இல்லை," என்று கூறிவிட்டு அவன் வெளியே சென்று விட்டான்.
"எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்.."
"இனி இதுதான் உன் வீடு, " என்று அழுத்தி கூறி விட்டு சென்றுவிட்டான் அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அவள் அழுதுக்கொண்டே இருந்தாள், வேலை ஆள் சாப்பாடு எடுத்து வந்தார்கள் .... அவள் எதுவும் எனக்கு வேண்டாமென்று கூறி அனுப்பிவிட்டாள்.
சாயந்திரம், ஏழு மணிக்கு நிறைய பாக்கட்டுகளுடன் அவன் வீடு வந்து சேர்ந்தான் . வந்தவுடனேயே, வேலையாட்களிடம், அவள் சாப்பிட்டாளா? என்று கேட்டு தெரிந்துக் கொண்டான். அவள் சாப்பிடவில்லை என்று தெரிந்துக் கொண்டவன், மிகுந்த கோபத்துடன் மேலே அவளை பார்க்க சென்றான்.... "நீ ஏன் சாப்பிடலை?" என்று கோபத்தோடு அவளருகில் சென்றான், அவள் பயந்துவிட்டாள்.
வேலையாள், சாப்பாடு கொண்டு வந்து வைத்தாள். " இந்தா, இப்போ என் எதிரே சாப்பிடு, " என்று ரவுத்ரமாய் கத்தினான்